ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்தின் ஊழல் வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?

Default Image

மாட்டு தீவன ஊழலின் 4வது வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்திற்கு வழங்கப்பட இருந்த  தீர்ப்பு சில காரணங்களால் நாளை ஒத்திவைக்கப்பட்டது.காரணங்கள் இன்னும் வெளிவரவில்லை.

பீகார் மாநிலத்தில் நடந்த மாட்டு தீவன ஊழல் தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது 6ற்கும் மேற்ப்பட்ட  வழக்குகள் போடப்பட்டன. இதில் ஏற்கனவே 3 வழக்குகளில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது.எனினும் மீதி வழக்குகள் விசரனை
இன்னும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

இம்மூன்று வழக்குகளின் தீர்ப்புகளில் முறையே 5, 3 மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை லாலுவுக்கு வழங்கப்பட்டது. இதன்படி ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் லாலு அடைக்கப்பட்டுள்ளார்.

1995-96ல் தும்ஹா கரூவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட, 4வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் மார்ச் 5ஆம் தேதி விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பு சில காரணங்களால் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் லுாலு, ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rashtriya Janata Dal leader Lalu Prasad’s corruption case adjourned tomorrow What is the reason?

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்