Tag: #ADMK

திடீரென டெல்லி பயணம்… பாஜகவுடன் கூட்டணி? எடப்பாடி பழனிசாமி விளக்கம்.!

டெல்லி : டெல்லி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் அவரை மாநிலங்களவை உறுப்பினர்களான தம்பிதுரை, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். இப்பயணத்தில் முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை பேசுவார்களா என எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எழுந்துள்ளது. அதன்படி, டெல்லியில் இன்று மாலை அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்ட பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு […]

#ADMK 5 Min Read
Edappadi Palaniswami - Delhi

“இபிஎஸ்-க்கு என் அன்பான வேண்டுகோள்!” முதலமைச்சரின் ‘முக்கிய’ கோரிக்கை!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதி குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு துறை ரீதியிலான அமைச்சர்கள் பதில் அளித்தும் வருகின்றனர். இந்த கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் இதே வேளையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் அதிமுக சார்பாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை […]

#ADMK 5 Min Read
Tamilnadu CM MK Stalin - ADMK Chief secretary Edappadi Palanisamy

“எல்லாம் ‘மாப்பிள்ளை’ செந்தில் பாலாஜிக்கு தெரியும்..,” உளறி கொட்டிய அதிமுக எம்.எல்.ஏ!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கான தேவைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது பவானி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பண்ணன் பேசுகையில், ” தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல்கள் நிறைய போடுறாங்க. அதன் மூலம் 100 கிலோ வாட் என்ற அளவில் மட்டும் தான் மின்சாரம் எடுக்க நாம் (அரசு) அனுமதிக்கிறோம். வெயில் குறைவாக […]

#ADMK 5 Min Read
Minister Senthil balaji - ADMK MLA KC Karuppannan

“அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இதயப்பூர்வ நன்றிகள்!” முதலமைச்சர் நெகிழ்ச்சி! 

சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய பாஜக அரசு முயல்கிறது என்றும், இதன் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என்றும், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை பொருட்டு தமிழக அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினர். மேலும், கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று மக்கள் தொகை […]

#ADMK 9 Min Read
Tamilnadu CM MK Stalin

பதவிக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் அல்ல நான் – இபிஎஸ் பேச்சு!

சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நோன்பு திறந்து வைத்தார். அதன்பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர் ” என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை ” என பேசினார். இது குறித்து பேசிய அவர் ” பதவிக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் அல்ல நான். மக்களுக்காக தொண்டாற்ற அரசியலுக்கு வந்தவன். எனக்கென்று தனியாக கருதும், நிலைப்பாடும் இல்லை. ஜாதி […]

#ADMK 5 Min Read
EdappadiPalaniswami

“ஆடு நனைகிறதென ஓநாய் கவலைப்பட வேண்டாம்” தங்கம் தென்னரசுக்கு ஜெயக்குமார் பதிலடி!

சென்னை : இன்று  தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.  அப்போது, ஒரு மடிக்கணினி 10 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது தரமானதாக இருக்குமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த அவர் ” ஒரு மடிக்கணினி ரூ.20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மதிப்பீடு செய்யப்பட்டு அதற்காக தற்போது 2 ஆயிரம் கோடி ரூபாய் […]

#ADMK 6 Min Read
d jeyakumar admk

சட்டப்பேரவையில் திமுக vs அதிமுக : “கவனமாக இருங்கள்.,” “எங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..,” 

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில் இன்று பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். அப்போது தமிழக அரசு அறிவித்த மடிக்கணினி திட்டம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். ஒரு மடிக்கணினி 10 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது தரமானதாக இருக்குமா? என கேள்வி எழுப்பினார். ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், […]

#ADMK 9 Min Read
Minister Thangam Thennarasu - ADMK Chief secretary Edappadi Palanisamy

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு என இருவருமே இரட்டை இலை சின்னத்திற்கும், அதிமுக கட்சிக்கும் உரிமை கோரி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என முறையிட்டு வருகிறார்கள். இந்த சூழலில் சென்னை உயா் நீதிமன்றத்தில் அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திண்டுக்கல் சூரியமூா்த்தி என்பவர் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரணை செய்த உயர் […]

#ADMK 5 Min Read
ADMK

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளது எனவும், சமீபகாலமாக கொலை நடப்பது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும், காவல்துறை குற்றவாளிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் . அதற்கு பதில் அளிக்கும் வகையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் போகிற போக்கில் […]

#ADMK 6 Min Read
cm mk stalin

“அதிமுகவினருக்கு தைரியம் இருக்கா?” சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். கொலை நடப்பது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும், காவல்துறை செயலற்றதாகிவிட்டதாகவும் அவர் சாடினார். குடும்பத் தகராறு, முன்விரோதம் காரணமாகவே கொலைகள் நடந்ததாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்த நிலையில், இருவருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. அப்போது,  எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுகவினர் வெளிநடப்பு செய்யும் பொழுது, “குற்றங்கள் நடக்கவில்லை […]

#ADMK 5 Min Read
MK Stalin - EPS

“கொலை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது தான் காரணம்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு! 

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நிகழந்த அடுத்தடுத்த கொலை சம்பவங்கள் குறித்தும் விவாதிக்க கூறினார். அதன் பிறகு அமளி ஏற்பட்டு அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனை தொடர்ந்து தமிழகதில் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 4 கொலைகள் […]

#ADMK 10 Min Read
TN CM MK Stalin say about Murders in Tamilnadu

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சொன்ன பதில்?

சென்னை :  கடந்த (2024) ஆண்டு ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிக ஒரு ராஜ்யசபா சீட்டை அதிமுகவிடம் கோரி வருவதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருந்தது. தேமுதிக இந்தக் கோரிக்கையை அதிமுக தலைமை முழுமையாக ஏற்கவில்லை என்பதால் இரண்டு கட்சிகளுடைய கூட்டணியில் சலசலப்பு ஏற்படலாம் என்றும் தகவல்கள் பரவி […]

#ADMK 4 Min Read
premalatha vijayakanth edappadi palanisamy

“தெர்மாகோல்., தெர்மாகோல்., என ஓட்டுகின்றனர்!” செல்லூர் ராஜு வருத்தம்! 

சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு அந்ததந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், ” மாநில நிதிநிலை அறிக்கையில், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என கூறியுள்ள்ளீர்களே. திமுக ஆட்சி முடிய இன்னும் ஓராண்டு தான் இருக்கிறது, […]

#ADMK 4 Min Read
ADMK Former Minister Sellur Raju

“ஒற்றுமையாகதான் இருக்கோம் யாரும் பிரிக்க முடியாது”.. செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இபிஎஸ் பதில்!

சென்னை : அத்திக்கடவு திட்டம் வெற்றிபெற்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றபோது அதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் இருந்ததில் இருந்து இப்போது வரை இருவருக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் படங்கள் இடம்பெறவில்லை என்ற காரணத்தால் தான் கலந்துகொள்ளவில்லை என்கிற விளக்கம் அளித்ததை தொடர்ந்து செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில்  செங்கோட்டையன்  தொடர்ச்சியாக கலந்துகொள்ளாமல் […]

#ADMK 6 Min Read
sengottaiyan edappadi palanisamy

“வெற்றி தோல்வியை விட மக்களுக்கு இது போய் சேர வேண்டும்” – இபிஎஸ் பேட்டி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக முன்னெடுத்தது. சபாநாயகர் அப்பாவு திமுகவுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்குவதில்லை உள்ளிட்ட புகார்களை முன்னிறுத்தினர். இன்று கேள்வி பதில் நேரம் முடிந்து சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு பேரவையில் இருந்து வெளியேறினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி  வாக்கெடுப்பு நடத்தினார். இதில் ஆளும் திமுகவுக்கே அதிக உறுப்பினர் […]

#ADMK 7 Min Read
ADMK Chief secretary Edappadi palanisamy

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்னதாக அதிமுகவினர், சபாநாயகரின் பதவி நடவடிக்கைகள் மற்றும் சட்டப்பேரவையை நடத்தும் முறை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுவதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான […]

#ADMK 5 Min Read
TN Assembly - Speaker Appavu

பரபரக்கும் சட்டப்பேரவை., வெளியேறினார் அப்பாவு! ஆதரவளித்த செங்கோட்டையன்! 

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக சபாநாயகர் அப்பாவு மீது எதிர்க்கட்சியான அதிமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டபேரவையை சபாநாயகர் அப்பாவு முறையாக நடத்துவதில்லை. எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் பேச போதிய நேரம் அனுமதி அளிப்பதில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார் உள்ளிட்ட பல்வேறு […]

#ADMK 4 Min Read
TN Assembly Speaker Appavu

நம்பிக்கை இல்லா தீர்மானம் : ஒன்றிணைந்த அதிமுக! விலகி நிற்கும் செங்கோட்டையன்! 

சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அடுத்து மார்ச் 15ஆம் தேதியன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடத்த சட்டப்பேரவை கூட உள்ளது. இந்த சட்டப்பேரவை நிகழ்வுகளில் சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக ஆளும் கட்சிக்கு (திமுக) ஆதரவாக செயல்பட்டு […]

#ADMK 5 Min Read
ADMK Chief secretary Edappadi Palanisamy

LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர் செரியன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, கேள்வி நேரம் தொடங்கும். அதன் பின் அதிமுக சார்பில் சபாநாயகர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோரப்படலாம். உடனடியாக அதை ஏற்கும்பட்சத்தில் துணை சபாநாயகர் அவையை வழிநடத்திச் செல்வார். தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த பலதடவை முயற்சி […]

#ADMK 2 Min Read
appavu - pm modi

“திமுக போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, பட்ஜெட்டுக்கு முன்னதாக ₹ குறியீட்டிற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ என்பதை ரூபாயின் அடையாள இலச்சினையை தமிழக அரசு மாற்றியது. இதனை குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு கிடைத்த வரவேற்பு பற்றியும் ‘உங்களில் ஒருவன்’ என்கிற காணொளியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிருக்கிறார். இதனை எதிர்க்கட்சி […]

#ADMK 6 Min Read
MK Stalin - EPS