ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 5 விசைப்படகுகள், மீன்கள், வலைகளை பறிமுதல் செய்த கடற்படையினர் அவர்களை தலைமன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த மாதத்தில் 29 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது கவனிக்கத்தக்கது. அதாவது, கடந்த 20-ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களும், கடந்த 9-ஆம் தேதி 19 பேரை […]
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என ரசிகர்களுடன் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஒரு பக்கம், இந்திய அணியின் வெற்றிக்காக அனைத்து ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். மறுபக்கம் கிரிக்கெட் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில், ஐஐடி பாபா இந்த விஷயத்தில் வேறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளார். இது, இந்திய […]
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் எட்டு தொழிலாளர்கள் உள்ளே சிக்கியதை அடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 500 அடி ஆழம் கொண்ட சுரங்கப்பாதையின் உள்ளே சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள டோமல்பெண்டா அருகே இந்த சரிவு ஏற்பட்டது. அந்த நேரத்தில், 60 தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர், 52 பேர் தப்பினர், சிலர் காயங்களுடன், எட்டு […]
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் என்றாலே எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம் தான். இந்நிலையில், துபாயில் தொடங்க இருக்கும் போட்டி முழுவதும் நேரலை செய்யப்படுமென தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை மெரினா கடற்கரையின் விவேகானந்தர் இல்லம் […]
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க வைக்கின்றன. இதனால் அவர் செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட பெரும் பேசுபொருளாக மாறிவருகிறது. அதற்கொரு உதாரணமாக தற்போது ஒரு சம்பவம் நிகந்துள்ளது. அதாவது, வாஷிங்டன்னில் உள்ள ஓவல் மைதானத்தில் இருக்கும் தனது மேஜையை டொனால்ட் டிரம்ப் மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளார். ஒரு புதிய ஜனாதிபதி பொறுப்பேற்ற உடன், தனக்கு பிடித்த அலுவலக மேஜையை 7 பாரம்பரிய […]
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும் விதமாகவே உட்கட்சி பூசல்கள் அவ்வப்போது வெளிப்படவும் செய்கின்றன. தற்போது டிரெண்டில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் இரு தரப்பு என்பது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விருதுநகர் காங்கிரஸ் எம்பிமாணிக்கம் தாகூர் தரப்பு ஆகும் . ஏற்கனவே மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மாவட்ட தலைவர்களை கலந்து ஆலோசிப்பதில்லை, தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார் என அதிருப்தி மாவட்ட செயலாளர்கள் […]
டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த தேர்தலின் போது கடந்த ஜனவரி 31 அன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது துவாரகாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரணியில் டெல்லி தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பாஜக ஆட்சி அமைந்தவுடன் மாதம் ரூ.2500 வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்து இருந்தார். ஆம் ஆத்மி கேள்வி இன்னும் அது குறித்து அதிகாரப்பூர்வமாக […]
சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், இன்று முக்கிய பொறுப்பில் இருந்த காளியம்மாளும் விலகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏனென்றால், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே நிகழ்ச்சி ஒன்று நடைபெறவிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் காளியம்மாள் பெயருக்கு கீழ் நாதக பொறுப்பு […]
சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஜனவரி 28 அன்று, மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் துணைத் தலைவர் ரகு உட்பட 500 பேர், சேலம் மேற்கு தொகுதி நிர்வாகிகள் பால்பண்ணை ரமேஷ், மெய்யனூர் செல்வமூர்த்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாதகவில் இருந்து விலகினர். […]
டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி மொழி குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “மொழி அடிப்படையில் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, இந்தியாவின் பன்முக மொழி பாரம்பரியம் அதற்கு பொருத்தமான பதிலடி கொடுக்கிறது. மராத்தி உட்பட அனைத்து முக்கிய மொழிகளிலும் கல்வியை ஊக்குவித்து வருகிறது. “இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை. ஒவ்வொரு மொழியும் மற்றொரு […]
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, ஞானசேகரனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு […]
சென்னை : நடிகர் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கி தான் அரசியல் வருவதாக அறிவித்தார். இந்த கட்சி தொடங்கப்பட்டு நேற்றுடன் 8-ஆண்டுகள் ஆகிய நிலையில், இதனை கொண்டாடும் விதமாக சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பல விஷயங்களை பேசினார். இதுகுறித்து பேசிய அவர் ” நான் தோல்வி அடைந்த அரசியல்வாதி என பலரும் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள […]
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்த வருகிறார். அவ்வாறு தற்போது கடலூரில் நடைபெற்று வரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கடலூருக்கு புதிய 10 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையாக அறிவித்தார். முதலமைச்சர் அறிவித்த 10 அறிவிப்புகள் : திட்டக்குடி, விருத்தாச்சலம் பகுதியில் உள்ள வேளாண் மக்கள் பயன்பெறும் வகையில் வெலிங்டன் ஏரி கரைகள் பலப்படுத்தப்படும். அப்பகுதி […]
சென்னை : நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை கடந்த 2018 பிப்ரவரி மாதம் 21இல் ஆரம்பித்தார். இக்கட்சி தொடங்கப்பட்டு தற்போது 8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிகழ்வு நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார். அவர் பேசுகையில், நான் அரசியலில் தோற்றுவிட்டதாக பலர் கூறுகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்திருந்தால் எனது நிலை வேறு. 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் […]
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை குறிப்பிட்டு இனி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் Go Back மோடி என சொல்ல மாட்டார்கள் Get Out Modi என்று சொல்வார்கள் என கூறியிருந்தார். இதனை அடுத்து #GetOutModi எனும் ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இதனை குறிப்பிட்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு […]
பெய்ஜிங் : கொரோனா காலத்தை யாரு தான் மறக்க முடியும்? அந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா அச்சத்தை பார்த்து எத்தனை பேர் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். கொரோனா பாதிப்பு இப்பொழுது இல்லை என்றாலும், அவ்வபோது கொரோனா தொற்று போலவே சில வைரஸ் தொற்று பரவுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், மனிதர்களிடையே பரவும் புதிய வகை கொரோனா வைரஸை தற்போது கண்டறிந்துள்ளதாக சீன வைரஸ் நிபுணர் Shi Zhengli அறிவித்துள்ளார். […]
திருச்சி : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் PM Shri திட்டத்தின் கீழ் தமிழகம் சேராதது வரையில் தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்பது போல மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேசியது தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிக்கிறது என தமிழகத்தில் திமுக, அதிமுக , விசிக, காங்கிரஸ், நாதக, தவெக என அனைத்து கட்சியினருமே எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகின்றனர். அன்பில் […]
சென்னை : கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தான் அரசியல் செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் கல்வியை அரசியலாக்கக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிய கல்விக் கொள்கை மீதான தமிழக அரசின் […]
டெல்லி : மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இது சர்ச்சையாக மாறுவதற்கு காரணமே புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தான். இதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வரும் சூழலில் சமீபத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் […]
சென்னை : இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) ஏற்பாட்டில், ‘FICCI மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ மாநாடு இன்று, பிப்ரவரி 21, 2025, சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தொடங்குகிறது. (பிப் 21-22) இரண்டு நாள் நடைபெறும் இந்நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு தொடங்கி வைக்கஉள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன் தலைமை வழிகாட்டியாக பங்கேற்கிறார். மாநாட்டின் […]