டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் சுமன் துபே மற்றும் பிறரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான பணமோசடி விசாரணையில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் […]
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலில் வரும் கருத்துகள் அவருடய சொந்த கருத்துகள் என்றும் அதற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் என்ற தொடர்பும் இல்லை என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ”சாட்டை துரைமுருகன் நடத்தும் ‘சாட்டை’ (YouTube Channel) தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் […]
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தின் நிர்வாகம், கொள்கை முடிவுகள், சட்டமுன்வரைவுகள், மற்றும் மக்களின் நலன் தொடர்பான முக்கிய விவகாரங்களை விவாதித்து முடிவெடுக்கப்படும். முந்தைய கூட்டங்களில், நிதிநிலை தயாரிப்பு மற்றும் முதலீடுகள் குறித்து […]
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு வங்க முதல்வரை கடுமையாக சாடி சில விஷயங்களை பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” மதச்சார்பின்மை என்ற பெயரில், கலவரக்காரர்களுக்கு அமைதியின்மையை உருவாக்க முழு சுதந்திரத்தையும் மேற்கு வங்கத்தில் அரசு வழங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது, ஆனால் அங்கு அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. […]
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8, 2025 அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. திருக்கல்யாண நிகழ்வை நேரில் காண விரும்புவோர் இணையதளம் வழியாக கட்டணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நிலையில், மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெறுவது தொடர்பாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரூ.200, ரூ.500 மற்றும் கட்டணமில்லா தரிசன […]
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து இது குறித்து சில விஷயங்களை பற்றி பேசினார். இதனிடையே, தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வாழ்த்து தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உரையாற்றினார். அதே சமயம், பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதற்காக […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் 15-08-2025 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், பதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான […]
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற் போலவே மத்திய அரசின் சில செயல்பாடுகளும் அரங்கேறி வருகின்றன. அப்படியொரு நிகழ்வை சுட்டிக்காட்டி தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது கண்டன பதிவை சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் குறிப்பிட்ட பதிவில் கேரள மாநில கல்வியமைச்சர் வி.சிவன்குட்டி இந்தி திணிப்பு பற்றிய கூறிய கண்டனம் பற்றிய செய்தித்தாளை […]
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவன் , தன்னுடன் பயிலும் சக மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வந்த இரு மாணவர்கள் நண்பர்களாகவே இருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு இருவருக்கும் இடையே எதோ பிரச்சனை ஏற்பட்டு பிரிந்ததாகவும், இன்று எதோ […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து இன்று முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கி உள்ளது. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து இது குறித்து சில விஷயங்களை பற்றி பேசினார். இது குறித்து பேசிய அவர் ” தற்போதைய காலகட்டத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. […]
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட பிறகு பொற்கொடி கட்சியில் முக்கியப் பொறுப்புகளை ஏற்று பணியாற்றி வந்தார். உதாரணமாக பொற்கொடி, சென்னை வடக்கு மாவட்ட மாநிலச் செயலாளராகவும், மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வந்தார். இந்த சூழலில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். இனி அவர் கட்சி பதவிகளில் ஈடுபட […]
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue Origin) நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் (New Shepard) விண்கலத்தில் சுமார் 10 நிமிடங்கள் நீடித்த விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர். இந்தப் பயணம் ஏப்ரல் 14 ஆம் தேதி, அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் உள்ள புளூ ஒரிஜின் நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து காலை 8:30 மணிக்கு (CDT) தொடங்கியது. இந்தப் பயணம், 1963 […]
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து இன்று முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்வார் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அமலில் உள்ள அந்நியர் பதிவு சட்டம் 1940-ன் படி அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் 30 நாட்கள் கால கெடுவுக்கு மேல் தங்கியிருக்கும் […]
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த தடைகாலம் முதலில் 45 நாட்கள் என இருந்தது. தற்போது 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவு முதல் அதாவது இன்று (ஏப்ரல் 15) முதல் 61 நாட்கள் ஜூன் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில் மாநில அரசு ஒரு முக்கிய உள் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தியது. பட்டியலின (எஸ்.சி) பிரிவினருக்கு உள்இடஒதுக்கீடு குறித்த அரசாணையின் முதல் பிரதியை தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பெற்றுக்கொண்டார். இதன் மூலம், தெலங்கானா மாநிலமானது பட்டியல் சாதிகளுக்கு உள் இடஒதுக்கீடு திட்டத்தை சட்டப்பூர்வமாக அமல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றது. இந்த சட்டம் […]
ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருமலை வெங்கடேஸ்வரருக்கு நன்றி செலுத்த முடிவு செய்து சில விஷயங்களை செய்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 8 அன்று, சிங்கப்பூர் பள்ளியில் பயின்று வரும் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர், அங்கு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளார் என்றும், இதனால் கை, கால்களில் காயம் ஏற்பட்டது என்றும் தகவல் வெளியாகி […]
சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோவில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கும் பிரதமர் மோடிக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். வீடியோவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் ” கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருக்கு இடையில் […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி வைக்கிறது என அறிவித்தார். அமித்ஷா உடன் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனையடுத்து,தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்ததை அடுத்து திமுக மற்றும் அதன் […]
சென்னை : இன்று ஏப்ரல் 1 தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு தரப்பினர் சித்திரை திருநாள் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. எனவே, அவர் எதற்காக வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்கிற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்து முதல்வருக்கு […]
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி வைத்தது. இந்த நிகழ்வில் அமித்ஷா உடன் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்ததை அடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடுமையாக […]