சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர் லாரி வாடகை கட்டணம் கிலோமீட்டருக்கு 10-15% குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லாரிகளின் பராமரிப்பு, ஓட்டுநர்களின் தகுதி தொடர்பாக கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் , இதற்கு இணங்காத லாரிகளுக்கு அபராதம் அல்லது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் விதிமுறை உள்ளது என்றும் , எல்.பி.ஜி டேங்கர்களுக்கு புதிய GPS கண்காணிப்பு முறை மற்றும் டிஜிட்டல் டிராக்கிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், […]
வாஷிங்டன் : அமெரிக்கா வாக்குப்பதிவு நடைமுறைகளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், அதனை திருத்தி இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகளை போல கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவையும் டிரம்ப் நேற்று (மார்ச் 25) பிறப்பித்தார். அமெரிக்காவில் வாக்குபதிவு நடைமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அமெரிக்காவில் பொதுத் தேர்தல்கள் என்பது இந்தியாவை போல நாடு முழுவதும் ஒரே தேர்தல் விதிகள் என்றில்லாமல், மாநில அரசுகளால் […]
டெல்லி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அதிமுக தலைவர்கள் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர். முதலில் டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறிவிட்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த சந்திப்பை அடுத்து அமித்ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் , 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக […]
சென்னை : தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல தொடங்கியுள்ளது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். நேற்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசி இருந்தார். அதனை தொடர்ந்து இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்திற்கு புதிய கட்டடம் எப்போது கட்டப்படும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா […]
சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவரது மறைவுக்கு நேற்று முதலே பல்வேறு திரைபிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல தொடங்கியுள்ளது. இதில் உறுப்பினர்களின் […]
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சமீபத்தில், அவருக்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென அவர் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மாரடைப்பால் நேற்றிரவு உயிரிழந்த நடிகர், இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக […]
சென்னை : நேற்று தலைநகர் சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுமார் 7,8 இடங்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. 2 கொள்ளையர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்து தொடர் செயின் பறிப்பில் ஈடுப்பட்டு இருந்தது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தெளிவானது. சென்னை திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வேளைக்கு சென்ற பெண்கள், நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்கள், வெளியில் நடமாடிய பெண்கள் […]
சென்னை : தமிழக அரசியலில் மிக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே அவசரமாக திடீர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக முன்னால அமைச்சர்கள் சிலர் டெல்லி பயணம் மேற்கொண்டனர். அதிமுக கட்சி அலுவலகம் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது. அதனை காணவே எடப்பாடியார் டெல்லி சென்றார் என அதிமுகவினர் கூறி வந்தாலும், யாரும் பாஜக தலைவர்களை சந்திக்க இபிஎஸ் சென்றுள்ளார் என்ற கூற்றை முற்றிலுமாக […]
திருநெல்வேலி : அதிமுகவில் இருந்து 1970-ல் நெல்லை மாவட்டம் ஆலங்குளம், 1980-ல் நெல்லை பாளையம்கோட்டை ஆகிய தொகுதிகளில் இருந்து எம்எல்ஏ-வாக பொறுப்பேற்றவர் கருப்பசாமி பாண்டியன். அதன் பிறகு அதிமுகவில் இருந்து விலகி திமுக-வில் இணைந்து 2000-ல் தென்காசி தொகுதி திமுக எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்றிருந்தார் பின்னர் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்கு பிறகு கடந்த 2020-ல் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். அதிமுக மாவட்ட கட்சி பொறுப்புகளில் முக்கிய அங்கம் வகித்து வந்த கருப்பசாமி […]
சென்னை : தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமாகிய நடிகர் மனோஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அண்மையில், அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று மாரடைப்பால் காலமானார் என்று கூறப்படுகிறது. இன்னும் சில மணி நேரத்துக்குள் மனோஜ் உடல் சென்னை நீலாங்கரை வீட்டுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுச் செய்தி, திரையுலகை மட்டுமல்லாமல் […]
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில் அவரது இந்த திடீர் பயணம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ள நிலையில், இந்த பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதையடுத்து, அவர் இன்று இரவு அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் டெல்லி பயணம் குறித்து […]
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அதன்படி, பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் நகராட்சிகளின் எண்ணிக்கை 146ஆகவும், பேரூராட்சிகளின் எண்ணிக்கை 491ஆகவும் இருக்கும் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் இருக்கும். நகராட்சிகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “திருச்செங்கோடு, உடுமலை, பழனி […]
சென்னை : தமிழ்நாட்டில் காவல்துறையைச் சேர்ந்த 10 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு எஸ்.பி.யாக சுஜாதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் டிஐஜி அபினவ் குமார் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை டிஐஜி மூர்த்தி ராமநாதபுரம் டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை மாநகர காவல் உளவுப்பிரிவு- 1 […]
டெல்லி : டெல்லி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் அவரை மாநிலங்களவை உறுப்பினர்களான தம்பிதுரை, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். இப்பயணத்தில் முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை பேசுவார்களா என எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எழுந்துள்ளது. அதன்படி, டெல்லியில் இன்று மாலை அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்ட பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு […]
டெல்லி : மாநிலத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 25 அன்று முதலமைச்சரும் நிதியமைச்சருமான ரேகா குப்தா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது பாஜக அரசு 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு ரூ.28,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது அதே சமயம் பெண்கள் நலனுக்காக ரூ.5,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பேசிய ரேகா குப்தா ” இது ஒரு சாதாரண பட்ஜெட் அல்ல. டெல்லி […]
சென்னை : தமிழ்நாட்டில் காலியாக உள்ள நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்கள் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தீர்மானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 133 இடங்கள் மற்றும் ஊராக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 315 உறுப்பினர்கள் பதவிகளுக்கு வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த இடங்களில் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளது, அங்கு […]
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இன்னும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பேசி வருகிறார்கள். உதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்மொழிக் கொள்கையை தமிழகம் எப்போதும் ஏற்காது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். இந்த சூழலில் இன்று தமிழக சட்டப்பேரவையில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” இரு மொழிகொள்கை […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதி குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு துறை ரீதியிலான அமைச்சர்கள் பதில் அளித்தும் வருகின்றனர். இந்த கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் இதே வேளையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் அதிமுக சார்பாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கான தேவைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது பவானி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பண்ணன் பேசுகையில், ” தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல்கள் நிறைய போடுறாங்க. அதன் மூலம் 100 கிலோ வாட் என்ற அளவில் மட்டும் தான் மின்சாரம் எடுக்க நாம் (அரசு) அனுமதிக்கிறோம். வெயில் குறைவாக […]
திருப்பத்தூர் : மாவட்டம், வாணியம்பாடி அருகே கொத்தகோட்டையில் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை அரசு பேருந்து ஓட்டுநர் ஏற்றாமல் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருந்தது. இன்று காலை 12 படிக்கும் அந்த மாணவி தேர்வு எழுதுவதற்காக பள்ளி செல்ல பேருந்துக்காக காத்திருந்தார். அந்த பகுதியில் பொது போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு என்பதால், அவர் அரசு பேருந்தை மட்டுமே நம்பியிருந்தார். அந்த நேரத்தில் பேருந்து வரும் நேரத்தில் அவர் நின்றுகொண்டிருந்த போதிலும் அரசு பேருந்தின் ஓட்டுநர் […]