சென்னை : தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட ‘டிராகன்’ திரைப்படம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் திரையரங்குகளில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்தது. பிரதீப் ரங்கநாதன், கயாது லோஹர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கீழ், கலாபதி எஸ் அகோரம், கலாபதி எஸ் கணேஷ் […]
சென்னை : நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தன்னுடய கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக அரசியல் பயணத்தில் ஈடுபடவிருக்கிறார். எனவே, அவருடைய கடைசி திரைப்படம் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக நிலவியுள்ள நிலையில், இப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி (ஜன. 9) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், ரிலீஸ் […]
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆரம்பத்தில் பொங்கல் அன்று திட்டமிடப்பட்டிருந்த இப்படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஏப்ரலுக்கு தள்ளப்பட்டது. முதலில் ஏமாற்றமாக இருந்தாலும், டீசரை பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ரகசியங்கள் […]
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், இசையமைப்பாளர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கலைஞர் நோய்வாய்ப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிட்டது. இருப்பினும், வழக்கமான பரிசோதனைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு 29 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து வாழ்வதாக, கடந்த […]
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், வெளியிட்ட பின்னரே அவரது உடல் நலம் குறித்த விரிவான தகவல் தெரிய வரும். ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ளனர், மேலும் அவரது […]
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு, கார் ரேஸ் என இரண்டிலும் பயணித்து வரும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் அடுத்த மாதம் வெளியாகும் நிலையில், சமீபத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை வானத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுக்கிறது என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு டீசரில் பழைய அஜித்தை பார்க்க முடிந்த்து, மாஸ் டயலாக், ஆக்ஷன், நடை , உடை என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் எப்போடா […]
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ ட்ரெண்ட் ஆகிராறோ இல்லையோ தற்போதைய தலைமுறைகளிடம் கதாநாயகி கண்டிப்பாக ட்ரெண்ட் ஆகி விடுகிறார். அந்த வகையில், டிராகன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் கயாடு லோஹர் தற்போது பல இளைஞர்களின் புதிய கனவுக் கன்னியாக அவர் மாறியுள்ளார். அட ஆமாங்க… நடிகை கயாடு லோஹர் தான் இன்றைய இளசுகளின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சமூக […]
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று செய்திகள் வெளியானது. தற்போது, கல்பனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயன்ற பாடகி கல்பனாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் இப்போது சுயநினைவை பெற்றுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. அவரது வீட்டின் கதவுகள் இரண்டு நாட்களாக திறக்கப்படாததால், அப்பகுதி மக்கள் […]
சென்னை : திரைப்பட தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்த் வாங்கிய கடனுக்காக, நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. திரைப்படத் தயாரிப்புக்காகக் கடன் வாங்கிய தொகையைத் திருப்பிச் செலுத்தாததால், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகனும் பேரனும் சிக்கலில் சிக்கியுள்ளனர். சென்னை டி.நகரில் உள்ள தெற்கு போக் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் பங்களாவின் ஒரு பகுதியை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவாஜி கணேசன் பேரன் துஷ்யந்த் ரூ.3.74 கோடி […]
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான ரான்யா, துபாயிலிருந்து நேற்று புறப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் அவரைகைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நடிகை ரான்யா ராவ், கிச்சா சுதீப்புடன் மாணிக்யா உள்ளிட்ட கன்னடப் படங்களிலும், ‘பதாகி’ மற்றும் ‘வாகா’ போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். தகவலின்படி, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடிகை […]
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆம், சமூக வலைத்தளங்களில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் பாடகர் யேசுதாஸ் உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாட்டில் செய்திகள் வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில், தனது காந்த குரலில் பாடி ரசிகர்களை ஈர்த்தவர் பிரபல பாடகர் K.J.யேசுதாஸ். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள […]
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு 7.03 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அஜித் நடித்துள்ள இரண்டு படங்களில் ஒன்றான நடிகர் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ரசிகர்களின் கவனம் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு திரும்பியுள்ளது. ‘விடாமுயற்சி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை, இதனால் குட் […]
சென்னை : ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் ‘டிராகன்’ வெளியானதிலிருந்து, இந்தப் படம் பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் மிகுந்த விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்திய மதிப்பீட்டின் படி, முதல் நாளில் ரூ 6.5 கோடியும் 2வது நாளில் ரூ. 10.8 கோடியும், 3வது நாளில் ரூ.11.5 கோடி என இந்தப் படம் மொத்தமாக ரூ.28.80 கோடி வசூல் செய்துள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் வெற்றிக்காக இயக்குநர்கள், நடிகர்கள் […]
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இரு படங்களும் காமெடி, காதல் கலந்து ஃபீல் குட் ஜானரில் வெளியாகி இன்றைய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் குறிப்பாக, பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் வெளியான ‘டிராகன்’ படம் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றுள்ளது. படம் வெளியான 2 நாள்களில் சுமார் ரூ.25 கோடி வரை உலகளவில் […]
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் மூன்றாவது இடம் பிடித்து அசத்தினார். அதனைத்தொடர்ந்து தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் பரபரப்பாக கலந்துகொண்ட அஜித், 2 முறை விபத்தில் சிக்கியுள்ளார். முதல் முறை நடந்த விபத்தில் இருந்து மீண்டு வந்தாலும், இரண்டாவது முறை மீண்டும் விபத்து ஏற்பட்டு இரண்டு முறை கார் கவிழ்ந்துள்ளது. இதில், கார் தலைகீழாக உருண்டு […]
சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் மற்றும் காயத்ரி லோஹர் ஆகியோர் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பைப் பெற்றுள்ளது. […]
சென்னை : ‘எந்திரன்’ திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்திரன் படத்துக்காக இயக்குனர் ஷங்கர் பெற்ற பணத்திற்கு சமமான சொத்துக்களைதான் தற்போது அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் குற்றவாளி என உறுதியானால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத் திருட்டு அல்லது காப்புரிமை மீறல் என்கிற அடிப்படையில், பணமோசடி தடுப்புச் […]
சென்னை : அறிமுக இயக்குநர் சதிஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்துள்ள ‘Kiss’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் உள்ளது. இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திரைப்படமான ‘KISS’ டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எதிர்பாராத திருப்பத்துடன் கூடிய காதல் கதையைக் குறிக்கிறது, அதே நேரத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி தங்கள் வேடங்களில் அழகாகத் தெரிவது மட்டுமின்றி அழகாக […]
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “கண்ணாடி பூவே” பாடல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘கங்குவா’ திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்பதால், சூர்யா ரசிகர்கள் ரெட்ரோ மீது அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். இந்தப் படத்தில் நாயகி பூஜா ஹெக்டே தவிர ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், கருணாகரன், பிரேம் குமார், ராமச்சந்திரன் துரைராஜ், […]
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டு படக்குழு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் மே 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காதல் படங்களில் ஜாக்கோ பாயாக வலம்வரும் விஜய் தேவரகொண்டா, இந்த படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். டீசரில், விஜய் தேவரகொண்டா சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. போருக்குத் தயாராக இருக்கும் […]