மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுய்பகுதி.!

சென்னை : மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை (13 -ஆம் தேதி) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் சற்று வலுவடையக்கூடும். இதன் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல், அந்தமான் கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் 40-50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், [...]

Rain Alert -Tamilnadu

சென்னை :மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை (13 -ஆம் தேதி) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் சற்று வலுவடையக்கூடும்.

இதன் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல், அந்தமான் கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் 40-50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், ஆகஸ்ட் 11 முதல் 15 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மறுபக்கம், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவைலும் வாய்ப்புள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுய்பகுதி.!