சென்னை : கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தான் அரசியல் செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் கல்வியை அரசியலாக்கக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிய கல்விக் கொள்கை மீதான தமிழக அரசின் […]
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025 – 2026 நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்குத் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவையில் காலை 9.30 மணிக்கு தமிழக நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். இதற்கு பிறகு, மார்ச் 15ஆம் தேதி தேதி காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். […]
உத்தரப் பிரதேசம்: வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பகுதி நடைபெற்றது. இதில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்த கொண்டனர். அப்பொழுது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான், “நிதி நிலுவையில் இருப்பது எனக்கு நன்றாகவே […]
சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் உள்ளது. எனவே, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் திமுக தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு காதி மற்றும் தொழில் வாரிய துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் […]
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம தொழில்கள் துறையை அமைச்சர் பொன்முடிக்கு மாற்றி, வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் துறையையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளார். மேலும், 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். […]
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 52% ஆக உயர்ந்துள்ளது. இதை பார்த்து அதிமுக கலகலத்து போயுள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்த அவர், பாஜக, அதிமுக சேர்ந்து வந்தாலும் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது என கருத்துக்கணிப்பில் […]
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை முதல் 16ம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12ஆம் தேதி புதன்கிழமை மதுரை கிழக்கு, மதுரை கீழக்கு வடக்கு. கிழக்கு தெற்கு ஒன்றியங்கள் மற்றும் வண்டியூர் பகுதிகளுக்கான ஜல்லிக்கட்டு விழா என தனித்தனியே நடைபெறுகிறது. […]
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main) தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த இரண்டு பிரிவுகளிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு மாநில அரசின் பல்வேறு நிர்வாக மற்றும் நிர்வாக சாரா பதவிகளில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக TNPSC குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி,காலியாக உள்ள சார்-பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் […]
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இடைத்தேர்தல் இன்று நடைபெறுவதால், அத்தொகுதியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 வரை நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க அத்தொகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்குக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வேறு பகுதிகளில் பணி புரியும், […]
சென்னை : தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்டார். இந்நிலையில், இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்தச் சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் உரையாற்றிய போது, இன்று முதல் மக்களுடன் நேரடி தொடர்பில் […]
சென்னை : கோயம்புத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தொழில்முனைவோருக்கான “ChatGPT” என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு வரும் 31.01.2025 தேதி நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள் […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். இந்த முற வடகிழக்கு பருவமழையின் தாக்கம் ஜனவரி இறுதி வரை தொடர்ந்து நீட்டித்தது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவ மழை விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது. கடந்த ஆண்டு அக்.15ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை […]
சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் மீன்பிடித்துள்ள பகுதிகள் இலங்கையின் விரிவாக்கப் பகுதிகளில் உள்ளதால், சட்டப்படி அதற்கான அனுமதி இல்லாமல் மீன்பிடித்ததாக கூறப்படுகிறது. இலங்கைக்கடற்படையினர், சுமூகமாக இந்த மீனவர்களை கைது செய்து, அவர்கள் படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். இந்த சூழலில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க மு.க.ஸ்டாலின் […]
சென்னை : பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நகரில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் இந்த முயற்சி, மக்கள் நெரிசலை குறைக்கவும், ஒழுங்கமைந்த போக்குவரத்து சேவைகளை வழங்கவும் உதவும் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த மினி பேருந்துகள் குறிப்பாக நெரிசல் அதிகமான பகுதிகளில், சின்ன சாலைத் துறைமுகங்களில், மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் செயல்பட உள்ளது. குறிப்பாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மினி பேருந்துகள் இயக்க […]
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதுவிமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலாதுறைகள் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் மக்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரமும், நலன்களும் எந்தவகையிலும் […]
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம் வரிப்பகிர்வு தொகையை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம், ரூ.1,73,030 கோடி ரூபாயனது 2025 ஜனவரி மாதத்திற்கு மாநில வாரியாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2024இல் இந்த வரிப்பகிர்வு ரூ.89,086 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த முறை மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவிட இந்த முறை அதிக தொகை ஒதுக்கீடு […]
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம் தேதி) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கவிருக்கிறது. காலை, மதியம் என தனித்தனியாக டோக்கனில் விநியோகிக்கப்பட்ட தேதிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. அதாவது, நாளை (9ஆம் தேதி) முதல் 12ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிடப்பட்ட எண்களுக்கும், 13ஆம் தேதி விடுபட்ட அனைவருக்கும் வழங்க உள்ளது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு […]
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக தலைவர் விஜய் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி கட்சியை அறிவித்திருந்தார். இந்நிலையில், கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், விஜய் தனது கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த மாதத்திற்குள் பொறுப்பாளர்களை நியமிக்கும்படி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் […]
சென்னை: வடகிழக்கு பருவமழை 2024 ஆம் ஆண்டில் இயல்பைவிட 33% கூடுதலாக பதிவாகியுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எந்த மாவட்டத்திலும் இயல்பைவிடக் குறைவாக பெய்யவில்லை. இந்த ஆண்டு கடந்தாண்டைவிட 27 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. 6 மாவட்டங்களில் மிக அதிகம், 23 மாவட்டங்களில் அதிக மழையும், 11 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் […]
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் முதல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியயிட்டது. ஏசி அல்லாத திரையரங்குகளில் 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகவும், ஏசி திரையரங்குகளுக்கு 4 ரூபாயில் இருந்து 6 ரூபாயாகவும் […]