குரல் வாக்கெடுப்பில் வெற்றி.! 18வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு.!

Om Birla

டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மிக முக்கிய நிகழ்வான மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில் NDA கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிட்டார். I.N.D.I.A கூட்டணி சார்பாக காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிட்டார்.

இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் சபாநாயகர் தேர்தல் தொடங்கியது. அதில், ஓம் பிர்லாவை பிரதமர் மோடி சபாநாயகராக முன்மொழிந்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றிபெற்று பாஜக எம்.பி ஓம் பிர்லா 18வது மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யபட்டார்.

பாஜக எம்பி, முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஆதரவாக பாஜக தலைமையிலான NDA கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தனர். YSR காங்கிரஸ் எம்பிகளும் ஆதரவு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

I.N.D.I.A கூட்டணி வேட்பாளர் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷுக்கு, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருந்தன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்