சென்னை : தமிழ்நாட்டில் காலியாக உள்ள நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்கள் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தீர்மானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 133 இடங்கள் மற்றும் ஊராக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 315 உறுப்பினர்கள் பதவிகளுக்கு வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த இடங்களில் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளது, அங்கு […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதி குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு துறை ரீதியிலான அமைச்சர்கள் பதில் அளித்தும் வருகின்றனர். இந்த கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் இதே வேளையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் அதிமுக சார்பாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை […]
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்து தினம் தினம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. வரும் சென்னை மற்றும் பெங்களூரு ரசிகர்கள் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்று அடுத்து வரும் மார்ச் 28இல் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்கள் இன்று காலை 10.15 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த டிக்கெட் […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கான தேவைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது பவானி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பண்ணன் பேசுகையில், ” தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல்கள் நிறைய போடுறாங்க. அதன் மூலம் 100 கிலோ வாட் என்ற அளவில் மட்டும் தான் மின்சாரம் எடுக்க நாம் (அரசு) அனுமதிக்கிறோம். வெயில் குறைவாக […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.நேற்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். இதனை தொடர்ந்து பிரதமரை அவர் சந்திக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. நியூசிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் ரிவர்டன் நகரத்தில் இருந்து தென்மேற்கே 170 கி.மீ. தொலைவில் கடலுக்கு நடுவே நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி […]
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நேற்று ஆளுநர் மாளிகையில் உலக காச நோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காச நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது புத்தகமான “ஒரு கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற நூலை ஆளுநரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பேசி அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டார். அவர் பேசுகையில், […]
விசாகப்பட்டினம் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் அடுத்தடுத்து சரிந்தாலும் அசுதோஷ் சர்மாவின் அசத்தல் ஆட்டத்தால் 19.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டின் […]
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரருமான கே.எல்.ராகுல், நடிகை அதியா ஷெட்டியை காதலித்து வந்த நிலையில் கடந்த 2023 ஜனவரி 23இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கடந்த ஆண்டு நவம்பரில் அதியா ஷெட்டி கர்ப்பமாக இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இது பிரசவ நேரம் என்பதால், ஐபிஎல் போட்டிகளில் இருந்து சிறிய ஓய்வு எடுத்து தனது மனைவியுடன் மும்பையில் இருந்தார் கே.எல்.ராகுல். இதனால் நேற்றைய டெல்லி […]
சென்னை : கமல்ஹாசன் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் (1986) படத்தில் அறிமுகமானவர் நடிகரும் கராத்தே மாஸ்டருமான ஷிகான் ஹுசைனி. விஜய் நடித்த பத்ரி படத்தில் விஜய்க்கு குத்துசண்டை சொல்லிக்கொடுக்கும் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற இவர் நடிப்பை தாண்டி வில்வித்தை கற்றுக்கொடுக்கும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். இதுதொடர்பாக தமிழக விளையாட்டுத்துறை உதவ வேண்டும் என்றும் அண்மையில் வீடியோ வெளியிட்டு இருந்தார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹுசைனி, கடந்த மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிசைக்காக […]
ஹைதிராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி ஹைதிராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வர்ர்ணையாளர்களில் ஒருவராக போட்டியை வர்ணை செய்து வந்தார். அப்போது அவர் பேசிய கருத்து தற்போது நிறவெறி சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியினர் ராஜஸ்தான் அணி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோப்ரா […]
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய பாஜக அரசு முயல்கிறது என்றும், இதன் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என்றும், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை பொருட்டு தமிழக அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினர். மேலும், கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று மக்கள் தொகை […]
சென்னை : தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தேர்தல் பற்றியும், புதிய வாக்காளர்களை சேர்ப்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம், கூடலூர், புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. அதேநேரம், வெயிலின் தாக்கம் அடுத்தடுத்த […]
சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாயசத்தில் வீழ்த்தியது. இதனை அடுத்து சென்னை அணியின் 2வது ஆட்டம் பெங்களூரு அணிக்கு எதிராக வரும் வெள்ளி (மார்ச் 28) அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியும் சென்னையில் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025-ன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய தெம்புடன் பெங்களூரு அணி 2வது போட்டியை சென்னையில் சென்னை சூப்பர் […]
திருச்சி : நேற்று திருச்சியில் பாஜக சார்பில் புதிய கல்வி கொள்கை பற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசினார். தமிழக பட்ஜெட் மீதான விமர்சனம், தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் பற்றி விமர்சனம் என ஆவேசமாக பேசினார். அப்போது புதிய தேசிய கல்வி கொள்கை பற்றி தனது கருத்துக்களை குறிப்பிட்டார். இதுவரை 18 நாளில் மும்மொழிக்கு ஆதரவாக […]
சென்னை : நடிகர் அஜித் குமார் தனது சினிமா வாழ்வை தாண்டி தனக்கு பிடித்தமான துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அண்மைக்காலமாக தனது கார் ரேஸிங்கில் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2024 செப்டம்பரில் அஜித் குமார் ரேஸிங் குழுவை ஆரம்பித்த இவர், ஜனவரி 2025-ல் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் 991 பிரிவில் அஜித்தின் அணி 3வது இடத்தை பிடித்து அசத்தியது. இதற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் […]
சென்னை : நேற்று (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் விளையாடிய மும்பை வீரர்கள் தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும், […]
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ன் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஹைதிராபாத் அணி மிரட்டல் இன்னிங்ஸை பதிவு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எதுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷான் 106 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 67 ரன்கள் எடுத்தார். கிளாசன் 34, நிதிஷ் ரெட்டி 30, […]
ஹைதிராபாத் : இன்று ஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது. 20 ஓவரில் 286 ரன்கள் என்பது IPL வரலாற்றில் 2வது அதிகபட்ச ரன் ஆகும். ஆனால், ஒரு ரன் வித்தியாசத்தில் தங்களது சொந்த சாதனையான […]
ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் மோதுகின்றன. இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்த்து. கடந்த முறை ஐபிஎல் சீசனில் அதிரடி […]
சென்னை : கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த மார்ச் 4ஆம் தேதியில் 7000 கிமீ சைக்கிள் பேரணியை தொடங்கினர். இந்த பேரணியை சென்னையில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மார்ச் 4இல் சிஐஎஸ்எப்தினத்தை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரையில் சுமார் 7 ஆயிரம் கிமீ தூரத்திற்கு இந்த பயணம் வடிவைக்கப்ட்டது. இதுகுறித்த விழிப்புணர்வு வீடீயோவை நடிகர் ரஜினிகாந்த் […]