சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு வந்தார். அந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் போது, முதலமைச்சர் பேசுகையில் இது என் வாழ்நாள் பெருமை என பேசினார். இந்த சட்டத்திருத்தம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ” இதற்கு முன்னர் அருந்ததியினர் மக்களுக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை வழங்கும் பலனை நான் இதே சட்டமன்றத்தில் அடைந்தேன். 2009-ல் முதலமைச்சர் கலைஞர் […]
சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ளதாக கூறப்படும் பாமக தலைவர்கள் டாக்டர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒன்றாக இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என பாமக மூத்த நிர்வாகி ஜி.கே.மணி முன்னதாக கூறியுள்ளார். இப்படியான சூழலில் இன்று, பாமக மாநாடு நடைபெற உள்ள மாமல்லபுரம் பகுதியில் மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாமக […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தது போல, இன்று பள்ளியில் மாணவர்கள் வன்முறையை தடுக்கும் வண்ணம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய அறிவிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சரே பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற சட்டமசோதாவுக்கு […]
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அம்பேத்கர் பற்றியும் அவர் எழுதிய அரசியல் சாசனம் பற்றியும் பேசினார். அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசன சட்டங்கள் பற்றி பேசுகையில், அண்மையில் உச்சநீதிமன்றம், தமிழக ஆளுநருக்கு எதிரான தீர்ப்பை சுட்டிக்காட்டி பேசினார். அவர் பேசுகையில், ” நமக்கு பைபிள், […]
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 33-36 டிகிரி செல்சியஸை எட்டலாம் என்றும், உள் மாவட்டங்களில் 38-40 […]
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் எளிய இலக்கை துரத்தி பிடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. ஆனால், அதனை எளிதாக துரத்திப்பிடிக்க விடவில்லை. துரத்திப்பிடிக்கவும் இல்லை. பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள். குறிப்பாக சாஹலின் […]
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில் ஓட்டுநர்/வாகன உரிமையாளர் ரீசார்ஜ் செய்து வைத்து கொள்ள வேண்டும் என்றும், அதன் பிறகு டோல்கேட் கடந்து செல்லும் போது Fastag பார் கோடு மூலம் ஸ்கேன் செய்து சுங்கக்கட்டணம் வங்கி கணக்கு வாயிலாக நேரடியாக வசூல் செய்யப்பட்டுவிடும். இந்த முறையின் மூலம் வசூல் செய்யப்படுவதால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் அதிகமான சில சமயம் வாகனங்கள் நீண்ட […]
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற் போலவே மத்திய அரசின் சில செயல்பாடுகளும் அரங்கேறி வருகின்றன. அப்படியொரு நிகழ்வை சுட்டிக்காட்டி தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது கண்டன பதிவை சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் குறிப்பிட்ட பதிவில் கேரள மாநில கல்வியமைச்சர் வி.சிவன்குட்டி இந்தி திணிப்பு பற்றிய கூறிய கண்டனம் பற்றிய செய்தித்தாளை […]
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவன் , தன்னுடன் பயிலும் சக மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வந்த இரு மாணவர்கள் நண்பர்களாகவே இருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு இருவருக்கும் இடையே எதோ பிரச்சனை ஏற்பட்டு பிரிந்ததாகவும், இன்று எதோ […]
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து இன்று முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்வார் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அமலில் உள்ள அந்நியர் பதிவு சட்டம் 1940-ன் படி அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் 30 நாட்கள் கால கெடுவுக்கு மேல் தங்கியிருக்கும் […]
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி, பெரியார், ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார், மகாராஜா உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார். கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு தமிழ் […]
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த தடைகாலம் முதலில் 45 நாட்கள் என இருந்தது. தற்போது 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவு முதல் அதாவது இன்று (ஏப்ரல் 15) முதல் 61 நாட்கள் ஜூன் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில் மாநில அரசு ஒரு முக்கிய உள் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தியது. பட்டியலின (எஸ்.சி) பிரிவினருக்கு உள்இடஒதுக்கீடு குறித்த அரசாணையின் முதல் பிரதியை தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பெற்றுக்கொண்டார். இதன் மூலம், தெலங்கானா மாநிலமானது பட்டியல் சாதிகளுக்கு உள் இடஒதுக்கீடு திட்டத்தை சட்டப்பூர்வமாக அமல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றது. இந்த சட்டம் […]
ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் விளையாடிய LSG அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா, பத்திரனா தலா 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, அன்சுல் கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதன் பிறகு களமிறங்கிய சென்னை அணி […]
திருச்சூர் : நட்புக்கு ஒண்ணுன்னா நண்பர்கள் ஓடி வந்துருவாங்க., எனும் சொற்றொடர்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு ஏற்ற பல சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கேரளா மாநிலம் திருச்சூரில் நிகழ்ந்துள்ளது. தன் நண்பனிடம் இருந்து ஒரே ஒரு போன் கால், சட்டை கூட அணியாமல் அடுத்த நிமிடம் வந்து நின்றுள்ளார் ஆம்புலன்ஸ் டிரைவர் அஜ்மல். திருச்சூர் மாவட்டம் எங்கண்டியூர் பகுதியை சேர்ந்த 24 வயதான அஜ்மல் எனும் ஆம்புலன்ஸ் […]
சென்னை : இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு தரப்பினர் சித்திரை திருநாள் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர். 2008ஆம் திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தை மாதம் 1ஆம் தேதியான பொங்கல் திருநாள், உழவர் தினத்தை தமிழ் புத்தாண்டு தினம் என அறிவித்தார். அதனை அடுத்து 2011ஆம் […]
ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின. இதில் RCB அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் ராஜஸ்தானின் 173 ரன்களை சேஸ் செய்த் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, 15வது ஓவரில் RR வீரர் வனிந்து ஹசரங்கா வீசிய […]
சென்னை : கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி வைத்தது. இந்த நிகழ்வில் அமித்ஷா உடன் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்ததை அடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் […]
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து. வருகின்றனர். பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இன்று ஏப்ரல் 14-ல் அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் […]
சென்னை : இன்று அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை சமத்துவ நாளாக தமிழக அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது. இன்று தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் இன்று, சென்னை இசிஆர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் […]