சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “உங்களில் ஒருவன்” நிகழ்வில் பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதில் தொகுப்பு வீடியோவாக அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில், மத்திய பட்ஜெட், கூட்டணி கட்சிகள், எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம், மக்கள் நல திட்டங்கள், பாலியல் குற்றங்கள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில், கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்? அதில் முரண்கள் இருக்கிறதா? என்று கேள்வி […]
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வேலைகளில் பிரதான ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த 2011 மே மாதம் முதல் , 2016, 2021 என மூன்று சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ். 3வது முறையாக முதலமைச்சர் பதவியில் தொடரும் மம்தா […]
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஆகியவை நடைபெற்றன. அதற்கான முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தது. தற்போது அந்த தொகுதியிலும் பின்னடைவையே சந்தித்து வருகிறது. பாஜக 25 […]
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது. கடந்த 2 சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி தற்போது தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சி எதிர்நோக்கியது. ஆனால், தற்போது வரையில் வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் சுமார் […]
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியிருந்த நிலையில், மக்கள் வேகமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இதில் மாலை 5 மணி வரை டெல்லி சட்டமன்றத்தில் […]
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்தின் 70 இடங்களுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அங்கு மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. […]
டெல்லி : நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கான கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவின் வளர்ச்சி குறித்து சில விஷயங்களை பேசினார். குறிப்பாக, இந்தியாவின் IT மற்றும் Digital India திட்டங்கள் உலகளவில் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன எனவும்,உலகின் வளர்ந்த நாடுகளை இந்தியாவின் UPI பரிவர்த்தனை ஈர்த்துள்ளது எனவும் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் ” மத்திய அரசு, Make in India மற்றும் (Atmanirbhar […]
டெல்லி : 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இன்று நாடாளுமன்றத்தின்பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்கவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நின்று பிரதமர் மோடி சில விஷயங்களை பேசியுள்ளார். அவர் என்ன பேசினார் என்பது பற்றி பார்ப்போம். அதில் பேசிய பிரதமர் மோடி ” […]
சென்னை : நாடாளுமன்றத்தின் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதலில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் காலை 11 மணிக்கு உரையாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார் . பெரியார் குறித்து சீமான் பேசி வரும் நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் கோவி.செழியன் “பெரியார் என்ற மாமலையைத் தொட்ட எதிரி […]
டெல்லி : நாடாளுமன்றத்தின் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதலில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். அந்த பட்ஜெட் மசோதாவையும் சேர்த்து மொத்தம் 16 சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதில் மிக முக்கிய மசோதா, வக்பு சட்ட திருத்தம் ஆகும். ஏற்கனவே உள்ள […]
டெல்லி : நாளை (ஜனவரி 31) டெல்லி நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. நாளை முதல் பிப்ரவரி 13 வரையில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது . அதன் பிறகு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் வரையில் இந்த கூட்டத்தொடர் நடைபெறஉள்ளது . இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைவரும் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட் 2025 மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். […]
அலகாபாத் : உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் திரளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் இரங்கலை தெரிவித்தும் மற்றோரு பக்கம் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த சம்பவம் குறித்து பேசுகையில் ” மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த […]
சென்னை : குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது. வருகின்ற (ஜனவரி 26 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை குடியரசு நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்நிலையில், இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை […]
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, எதிர்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக வேட்புமனு இறுதி பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி 20ஆம் தேதி இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும். பிப்ரவரி 5இல் வாக்குப்பதிவும், பிப்ரவரி […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது விமர்சனங்களையும், பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களையும் தனது மேடை பேச்சுக்களில் வெளிப்படுத்தி வருகிறார். இப்படியான கருத்தியல் கொண்ட அவரை இந்தியா கூட்டணியில் இணைய சொல்லி காங்கிரஸ் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏனென்றால், விஜய் எதிர்க்கும் திமுக, இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியானது தமிழகத்தில் […]
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் நிறைவுபெற்றது. அதன்படி, வேட்பு மனுத் தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவு பெற்றது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 56 பேர் நேற்று ஒரே நாளில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று […]
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாள் என்பதால் திமுக சார்பாக போட்டியிடும் வி சந்திரகுமார் இன்று தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். இன்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் பேசியதாவது ” தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் போட்டியிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் […]
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியுமில்லை, யாருக்கும் ஆதரவுமில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். 2026 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே தவெகவின் இலக்கு என்று கூறிய அவர், இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியில்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜகவைத் தொடர்ந்து விஜய்யின் தவெகவும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வரை களத்தில் […]
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில், மா.கி.சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக-வை […]
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தீவிர ஆலோசனைக்குப் பின் அத்தொகுதியை திமுகவுக்கு வழங்கியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் […]