புகார்களை தெரிவிப்பதற்கு புதிய அப்..! அசத்திய இந்திய ரயில்வே துறை.!

இந்திய ரயில்வே துறை,  ரயில் பயனிகள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காகவே புதிய புகார் செயலியை அறிமுகம் செய்துள்ளது . குறிப்பாக ரயில் பயணத்தின் போது பயணிகள்

இந்திய ரயில்வே துறை,  ரயில் பயனிகள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காகவே புதிய புகார் செயலியை அறிமுகம் செய்துள்ளது . குறிப்பாக ரயில் பயணத்தின் போது பயணிகள் சந்திக்கும் இன்னல்கள் தொடர்பாக புகார்களை தெரிவிக்கும் வகையில் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது என  இந்திய ரயில்வே துறை கூறியுள்ளது.

unknown node

இந்திய ரயில்வே துறை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளMADAD (Mobile Application for Desired Assistance During travel)செயலி பொறுத்தவரை ரயில் பயனத்தின் போது வழங்கப்படும் உணவு, கழிப்பறை தொடர்பான புகார்கள் தவிர அவசர உதவிக்கும்  அழைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பேஸ்புக், ட்விட்டர் மற்றும் உதவிக்கான தெடர்பு எண்கள் மூலம் புகார் அளிப்பதற்கு பதிலாக இந்த MADAD செயலியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. கண்டிப்பாக அவசர உதவிக்கு இந்த செயலி பயன்படும் வகையில் உள்ளது.

unknown node

இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ள இந்த செயலியின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் நாம் அளிக்கும் புகாரின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு ரயில் பயணத்தின் போது வழங்கப்படும் PNR எண் மூலம் புகாரை பதிவு செய்ய முடியும் என்று இந்திய ரயில்வே துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாடிக்கையாளர் சேவையை பரந்த அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது இந்திய இரயில்வே துறை. மேலும் பல தொழில்நுட்பமற்றங்களைக் கொண்டுள்ளது மேலும் நேரத்திற்கு தகுந்தபடி ஆன்லைனில் டிக்கெட்டை வழங்குகிறது இந்திய இரயில்வே துறை.