பெரியார், அம்பேத்கர், காமராஜர், வழியில் நடக்க.. “நான் வரேன்” தவெக தலைவர் விஜய்.!

"நான் வரேன்" கொள்கை விளக்கப்படாலில் இடம் பெற்ற தவெக தலைவர் விஜயின் உணர்வுப்பூர்வ வார்த்தை கேட்டு தொண்டர்கள் கண்கலங்கினார்கள்.

TVKMaanadu vijay song

விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடானது தற்போது பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த கட்சி தலைவர் விஜய் கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கினார். அதன்பிறகு, கட்சியின் இரண்டாவது பாடலும் மாநாட்டில் வைத்து வெளியிடப்பட்டது.

இந்த பாடல் தொண்டர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 2 முறை மாநாட்டில் ஒலிக்கப்பட்டது. பாடலில் இடம்பெற்ற வரிகள் அனைத்தும் தொண்டர்களுக்கு உணர்வுப்பூர்வமாக இருந்தது என்றே சொல்லலாம். ஏற்கனவே, மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு காமராஜர், அம்பேத்கார், பெரியார், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோருடைய விஜய் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அவர்களுடைய பேனர் வைத்தது மட்டுமில்லாமல் அவர்களுடைய கொள்களைளையும் தான் கடைப்பிடிப்பேன், கட்சியின் கொள்கைகளும் அது தான் என விஜய் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது பாட்டிலும் மக்களுக்குக் கூறியிருக்கிறார். அதாவது பாடலில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் வழியில் நடக்க.. “நான் வரேன்” என விஜய் பேசியிருந்தார்.

Read more- வெற்றி.. வெற்றி.. என தொடங்கும் தவெக கொள்கை விளக்கப் பாடல் வெளியீடு.!

விஜய் இப்படி பேசியது பாடல் மூலம் ஒலிக்கப்பட்ட நிலையில், தலைவர் விஜயின் உணர்வுப்பூர்வமான இந்த வார்த்தையைப் பார்த்து தொண்டர்கள் சற்று கண்கலங்கினார்கள். மேலும், அந்த பாடலில் வரிகள் மட்டும் இல்லாமல் பெரியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோர் விஜய் கையைப்பிடித்து அழைத்து வருவதுபோல காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்