விறுவிறு விக்கிரவாண்டி தேர்தல் வாக்குப்பதிவு.! 30 நிமிட தாமதம்… 110 இடங்களில் வெப் கேமிரா.!

DMK Candidate Anniyur Siva - PMK Candidate C Anbumani

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு பின்னர், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி , நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர் மொத்தமாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது.

தேர்தல் நடைமுறை வழக்கத்தை போல இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதுமே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முதல் ஆளாக தனது வாக்கினை செலுத்தினார். அதே போல, பனையபுரத்தில் உள்ள வாக்கு சாவடியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி தனது வாக்கினை செலுத்தினார்.

விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 276 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதில் 110 வாக்குசாவடிகளில் மட்டும் வெப் கேமிரா பொருத்தி வாக்குப்பதிவு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 30 நிமிடங்கள் வாக்குப்பதிவு தாமதாமாக ஆரம்பிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவது போல, 7 மாநிலங்களில் விக்கிரவண்டியுடன் சேர்த்து மொத்தம் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று சட்டமன்ற தொகுதிகளுகான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர் இறப்பு, நாடாளுமன்ற தேர்தலுக்காக எம்எல்ஏக்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்