சென்னை : விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டில் திமுக குறித்து விஜய் பேசியதற்கு திமுக ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றி வருகிறனர். அதாவது, திமுக தான் அரசியல் எதிரி.. பாஜக கொள்கை எதிரி என விஜய் வெளிப்படையாக பேசியிருந்தார். மேலும், “திராவிட மாடல் என பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள், என்ன தான் மோடி மஸ்தான் வேலை செய்தாலும் ஒன்னும் நடக்கப்போவதில்லை. திராவிட மாடல் என்ற பெயரில், பெரியார், அண்ணா பெயரில் நம்மை சுரண்டி கொள்ளையடிக்கும் குடும்ப, சுயநல கூட்டம் தான் […]
சென்னை : 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில், அதற்கான தேர்தல் பணிகளில் ஆளும் திமுக கட்சி தற்போதே தங்கள் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னதாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக இந்த தேர்தல் […]
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்று முடிந்தது. சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். தனது கட்சியின் கொள்கைகள், செயல்திட்டடங்கள் , அரசியல் கருத்துக்கள் என முதல் அரசியல் மாநாட்டை நினைத்தபடி செயல்படுத்தியுள்ளார் விஜய். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தொடங்கி, பிளவுவாத அரசியல், ஊழல்வாத அரசியல் தனது எதிரிகள் என்றும், திராவிட மாடல் அரசு என மக்களை […]
சென்னை : கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. 10 தலைப்புக்கள் கீழ் மாநிலம் முழுவதும் இருந்து 17ஆயிரம் பேர் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று இருந்தார். இந்த நிகழ்வை குறிப்பிடும் வகையில் இணையத்தில் திமுகவினர் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். […]
சென்னை : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக கட்சி சார்பில் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று சென்னை கலைஞர் அரங்கில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வை திமுக இளைஞரணி சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்து நடத்தி வருகிறார். இந்த நிகழ்வில் பேசிய துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின், ” கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திமுகவில் அனைத்து […]
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் , தொழிற்சங்கம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒரு மதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் அண்மையில் தொழிலாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் உடன்பாடு எட்டப்பட்டு தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். தொழிலாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் தமிழக அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தாமோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தானது பாடப்பட்டது. அதில், ‘சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்’ எனப் பாடுவதற்குப் பதிலாக ‘கண்டமதில்’எனப் பாடினார்கள். இதனால், மீண்டும் உதயநிதி பாடச்சொன்ன போது, அதிலும் தவறாகவே படித்திருப்பார்கள். அதன் பின் அதற்கு விளக்கம் கொடுத்து உதயநிதி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது, அவரது விளக்கத்திற்கு சாடியும், அவரிடம் சில […]
தூத்துக்குடி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. எனவே, இதன் காரணமாக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மும்மரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், இதே சமயம் கடந்த ஆண்டு தூத்துக்குடி, மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்குத் தேவையான அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை, தூத்துக்குடி எம்பி […]
சென்னை : இன்று கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கீ.வேணுவின் இல்ல திருமணவிழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக பற்றியும் , திமுக கூட்டணி பற்றியும் கூறிய பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசினார். அவர் கூறுகையில், ” மக்களால் போற்றப்படும் ஆட்சியாக திமுக உள்ளது. மக்களால் ஓரங்கட்டப்பட்ட கட்சியாக அதிமுக உள்ளது. திமுகவின் செல்வாக்கு வளர்ந்து […]
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு மேடையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது நாமக்கல் மாவட்டம் தான் எனவும் நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலை அமைவது மிகவும் பொருத்தமானது எனவும் உறையற்றினார். தமிழ்நாட்டில் திமுகவின் மதிப்பு சரிந்து விட்டதாக முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்தும் முதலவர் ஸ்டாலின் […]
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்துக்கு வருகை தந்திருந்தார். அதன்பிறகு காரின் மூலம் நாமக்கல் சென்ற அவர் மதியம் 12.30 மணியளவில் பரமத்தி சாலையில் உள்ள செலம்பக்கவுண்டா் பூங்காவில் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் உருவச் சிலையைத் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, 5 மணி அளவில் நாமக்கல்லில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு […]
சேலம் : கூட்டணியில் உள்ள கட்சிகளோடு திமுகவுக்கு புகைச்சல் ஏற்பட்டுள்ளது என்றும், 2026இல் கூட்டணி மாறலாம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ” திமுக கூட்டணி வலுவாக தான் இருக்கிறது என அவர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகைய ஆரம்பித்து விட்டது (சாம்சங் ஊழியர்கள் விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்டு). அடுத்து காங்கிரஸ் சார்பில் திமுகவின் நடவடிக்கை தொடர்ந்தால் நாங்களும் பேச வேண்டியிருக்கும் […]
சென்னை : இன்று தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு கோயில்களில் 304 இணைகளுக்கு (ஜோடிகளுக்கு) திருமணம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31 இணைகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில், அறநிலையத்துதுறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். திருமணமாகிய இணைகளுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் , ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த விழாவில் […]
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் படிப்பு மற்றும் மற்ற திறமைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு விருதுகள், கல்வி சலுகைகள் வழங்கி கௌரவிப்பதோடு அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் வெளிநாடு இன்ப சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று வருகிறது தமிழக அரசு. அண்மையில், 2023-24ஆம் கல்வியாண்டில் “கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பெயரில் பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளோம் என்றும், பிரான்ஸ் நாட்டின் […]
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அரசியல் காட்சிகளின் தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டம் வேண்டாம் எனவும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற […]
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெறும் எனவும் , இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இப்போது வரை இது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இதனை பார்த்த தமிழ் ஆர்வலர்கள் கடும் கோபத்துடன் இந்தி பேசாத மாநிலங்களில் என்ன காரணத்துக்காக இந்தி […]
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல் இருந்த துவரம் பருப்பு கடந்த 3 மாதங்களாக பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை என்றும், வெளிச்சந்தையில் ரூ.200க்கு துவரம் பருப்பு விற்கப்படுவதால், ரேஷன் கடைகளில் ரூ.30க்கு கிடைக்கும் துவரம் பருப்பையே பலரும் நம்பி உள்ளனர் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டி இருந்தார். இதனை தொடர்ந்து பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் , […]
சென்னை : வடகிழக்கு பருவமழை , வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. இன்றும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று மழையின் அளவு வெகுவாக குறைந்தது. கனமழை பெய்தவுடன் சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புறநகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு […]
சென்னை : திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியின் தலைமை நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி அவர்களின் கணவருமான முரசொலி செல்வம் நேற்று உயிரிழந்தார். இவர் சமீபத்தில் லேசாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக முரசொலி செல்வம் காலமானார். மறைந்த முரசொலி செல்வம் அவர்களின் இறுதி சடங்கு இன்னும் சற்று நேரத்தில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் […]
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மருமகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் காலமானார். அவருக்கு வயது (82). திமுகவின் நாளேடான முரசொலியின் நிர்வாக ஆசிரியராக முரசொலி செல்வம் 55 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். முரசொலியில் சிலந்தி எனும் பகுதியை எழுதி வந்த இவர் முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண் அயர்ந்த நேரத்தில் ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்தார். இவருடைய இறப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரங்கல் செய்தியையும் வெளியீட்டு […]