மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை முதல் 16ம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12ஆம் தேதி புதன்கிழமை மதுரை கிழக்கு, மதுரை கீழக்கு வடக்கு. கிழக்கு தெற்கு ஒன்றியங்கள் மற்றும் வண்டியூர் பகுதிகளுக்கான ஜல்லிக்கட்டு விழா என தனித்தனியே நடைபெறுகிறது. […]
சென்னை : தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதப்படுத்துகிறார். ஆளுநர் திருத்தம் சொல்லி இரண்டாவது முறையாக அனுப்பப்படும் மசோதாவுக்கு கண்டிப்பாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அதனையும் வருடக்கணக்கில் கிடப்பில் போடுகிறார். இதனால் மசோதா காலாவதி பல்வேறு குற்றசாட்டுகளை ஆளுநர் ரவி மீது தமிழக அரசு தரப்பு முன்வைத்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி […]
சென்னை : மத்திய பட்ஜெட் 2025-2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு உள்ளிட்ட சில அறிவிப்புகள் பாராட்டப்பட்டாலும் தமிழகத்திற்கு என சிறப்பு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது. வழக்கமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மாநிலங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில், மாநில பட்ஜெட்டானது 2ஆக பிரிக்கப்பட்டு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் […]
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்துவதுவதாக தமிழக அரசு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெளியான செய்தி தகவலின்படி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு, […]
சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 8) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தது. இதனை அடுத்து பாஜக சார்பில் யார் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்கள் என்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதே போல, தமிழ்நாட்டில் ஈரோடு […]
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கவில்லை என்பதால் இந்த முறை போட்டி என்பது திமுக vs நாதக என்று நிலவியது. இதனால், ஆளும் திமுக கட்சி வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தான் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டன. அதற்கேற்றாற்போலவே காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகி வந்தது. தொடர்ச்சியாகவே வி.சி.சந்திரகுமார் முன்னிலை […]
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, 43,887 வாக்குகள் வித்தியாசத்தில் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து, தொண்டர்கள் கொண்டாட தொடங்கி விட்டார்கள். தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் […]
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 43,488 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாதகவின் சீதாலட்சுமி, 9,152 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். மேலும், 1,976 வாக்குகள் பெற்று நோட்டா 3ஆம் இடம் பிடித்துள்ளது. […]
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கவில்லை என்பதால் இந்த முறை போட்டி என்பது திமுக vs நாதக என்று நிலவியது. இதனால், ஆளும் திமுக கட்சி வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தான் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டன. அதற்கேற்றாற்போலவே காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போது […]
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி முதல் எண்ணப்பட்டு, முதலில் தபால் வாக்குகள் எனப்பட்டன. அடுத்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் ஆளும் திமுக வேட்பாளருக்கு எதிராக அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக என பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால் திமுக vs நாதக என்ற போட்டியே ஈரோடு களத்தில் நிலவியது. இதனால் ஆளும் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். கிருஷ்ணகிரி மட்டுமின்றி, மதுரை,கரூர், திருப்பூர், சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிக்கூடம் படிக்கும் மாணவிகளுக்களுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதும் பரபரப்பை […]
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு, நெல்லையில் ரூ.66.04 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை தொடங்கி முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும், மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர், மாலை பொழுதில் கீழ ரத வீதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா […]
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகை தந்திருந்தார். வருகை தந்தவுடன் அவரை காண அந்த பகுதியில் மக்கள் கூடிய நிலையில் முதல்வருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு, நெல்லையில் ரூ.66.04 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை தொடங்கி முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்பிறகு, மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் கலந்து கொண்டு பேசிய […]
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட புதிய விதிகளின் படி, தேடுதல் குழுவின் தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக UGC பரிந்துரைப்பவரும், மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, யூ.ஜி.சி புதிய விதியை கொண்டுவந்துள்ளது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பலரும் யுஜிசி புதிய நெறிமுறைகள் திரும்பபெறவேண்டும் என கேட்டுக்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூட இதனை அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். பீகார், கர்நாடகா, தெலுங்கானா மாநில அரசுகள் அங்கு சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடிந்துவிட்டன. ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக இன்னும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கிறது. அதற்கான அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது எனவும் கூறி […]
சென்னை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று செல்கிறார். காலை 11 மணிக்கு நெல்லை வரும் ஸ்டாலின், கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.4,400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாடா சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார். பின்னர், புதிதாக அமையவுள்ள விக்ரம் சோலார் பேனல் பசுமை தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் அவர், பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வளாகத்தை திறக்கிறார். மேலும், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தமிழகத்தில் காலை 9 மணி அளவில் நடிகர் அஜித்குமாரின் […]
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் எனவும், அவர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் […]
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இடைத்தேர்தல் இன்று நடைபெறுவதால், அத்தொகுதியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 வரை நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க அத்தொகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்குக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வேறு பகுதிகளில் பணி புரியும், […]
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. மறுபுறம் இஸ்லாமிய மத தர்கா வழிபாட்டு தலமும் உள்ளது. அங்குள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் மாமிசம் சாப்பிட முயல்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் ‘மலையை காக்க வேண்டும்’ என இந்து அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்னதாக அறிவித்து இருந்தனர். முன்னதாக, இஸ்லாமியர்கள் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை […]
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர் முதல் சுயேட்சைகள் வரை வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ இவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்தையடுத்து நாளை (பிப்ரவரி 5ஆம் தேதி) அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்பட்டு இறுதியாக, 46 […]