சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து இது குறித்து சில விஷயங்களை பற்றி பேசினார். இதனிடையே, தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வாழ்த்து தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உரையாற்றினார். அதே சமயம், பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதற்காக […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி வைக்கிறது என அறிவித்தார். அமித்ஷா உடன் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனையடுத்து,தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்ததை அடுத்து திமுக மற்றும் அதன் […]
சென்னை : இன்று ஏப்ரல் 1 தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு தரப்பினர் சித்திரை திருநாள் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. எனவே, அவர் எதற்காக வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்கிற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்து முதல்வருக்கு […]
சென்னை : இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு தரப்பினர் சித்திரை திருநாள் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர். 2008ஆம் திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தை மாதம் 1ஆம் தேதியான பொங்கல் திருநாள், உழவர் தினத்தை தமிழ் புத்தாண்டு தினம் என அறிவித்தார். அதனை அடுத்து 2011ஆம் […]
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து. வருகின்றனர். பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இன்று ஏப்ரல் 14-ல் அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே விசிக, காங்கிரஸ், பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இந்த முழக்கத்தை முன்வைத்து வருகின்றனர். இதில் ஒருபடி மேலே சென்று, காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ஷெரிப், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பேருந்தைக்கு ஒட்டிய பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரில் ‘ 2026 துணை முதலமைச்சர்’ என பதிவிட்டு பதற்றத்தை கிளப்பியுள்ளார். […]
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா சென்னை வந்திருந்த சூழலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார். மேலும், தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையில் NDA கூட்டணி, தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி என தெரிவித்தார். இதனை அடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரும், […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என்று அதே மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இதனை அறிவித்தார். இதனையடுத்து அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்து பேசி […]
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு உடலுறவு குறித்து மறைமுகமாக மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுக்கு திமுக கட்சிக்கு உள்ளேயும், கூட்டணி கட்சியினர் மத்தியிலும், மற்ற கட்சியினர் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பையும் வெளியீட்டு இருந்தார். அதில், திமுக கட்சியில் […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார். இதனை திமுக கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், இப்போது தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்திருக்கிறார். அதன்படி, 2026 தேர்தல் களம் தவெகவிற்கும் திமுகவிற்கும் இடையே […]
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது, அந்த சந்திப்பில் அருகில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் (அடுத்த மாநிலத் தலைவர்) ஆகியோர் உடன் இருந்தார்கள். அப்போது அதிமுக கூட்டணி குறித்து அவர் பேசியதோடு திமுக குறித்து விமர்சனம் செய்தும் சில […]
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு உடலுறவு குறித்து மறைமுகமாக மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுக்கு திமுக கட்சிக்கு உள்ளேயும், கூட்டணி கட்சியினர் மத்தியிலும், மற்ற கட்சியினர் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இந்த சர்ச்சைகளை அடுத்து, அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. பொன்முடி, திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தார். அப்பதவியில் இருந்து அவரை நீக்கி கட்சி தலைவரும் , முதலமைச்சருமான […]
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் என்ற பெயருக்கு பொருள்படும் பழைய பெயரை குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனை அடுத்து தனது பேச்சின் தாக்கம் உணர்ந்த அமைச்சர் துரைமுருகன், தனது பேச்சு கருத்து வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். எனது பேச்சின் தன்மை அறிந்து நான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் […]
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை குறிப்பிட்டு மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பலைகளை எதிர்கொண்டது. இதனால், தற்போது திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், அமைச்சர் பொன்முடி, திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அதிரடியாக அறிவித்தார். வழக்கமான திமுக அறிக்கை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடும் […]
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார். அதில், சைவம் , வைணவம் , உடலுறவு என மறைமுகமாக மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறியது. இதற்கு மாற்று கட்சியினர் மத்தியில் மட்டுமல்ல, சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. திமுக எம்பி கனிமொழி தனது கடும் கண்டனத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை […]
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் விலக்கு குறித்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஈடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், அதிமுக புறக்கணித்த நிலையில், பாஜகவும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தது. இந்த நிலையில், பாஜகவினர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும் பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவும் நீட்டுக்கு எதிரான கூட்டத்தை புறக்கணித்து, தங்கள் எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளனர் என்று அதிமுக நிலைப்பாடு […]
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதப்படுத்துகிறார் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருந்தது. இதற்கு கடந்த 8-ம் தேதி, “10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக […]
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட் விலக்கு கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, த.வெ.க தலைவர் விஜய் திமுகவை விமர்சனம் செய்து நீட் தேர்வு விவகாரத்தில் நாடகமாடுவதாகவும் விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் ” மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி: தி.மு.க. […]
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” அதிமுக இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அவர்கள் விலகி நிற்கிறார்கள். அவர்களே அவர்களுக்கான சரிவை நோக்கி சென்று […]
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே சட்டப்பேரவையில் அரசு அளிக்கும் உரையை வாசிக்க மறுப்பது முதல் சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துவது வரையில் பல்வேறு செயல்பாடுகளை ஆளுநர் மேற்கொண்டு வந்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை குறிப்பிட்டு, ஆளுநர் , மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால அவகாசம் […]