சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இன்னும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பேசி வருகிறார்கள். உதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்மொழிக் கொள்கையை தமிழகம் எப்போதும் ஏற்காது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். இந்த சூழலில் இன்று தமிழக சட்டப்பேரவையில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” இரு மொழிகொள்கை […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதி குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு துறை ரீதியிலான அமைச்சர்கள் பதில் அளித்தும் வருகின்றனர். இந்த கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் இதே வேளையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் அதிமுக சார்பாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கான தேவைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது பவானி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பண்ணன் பேசுகையில், ” தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல்கள் நிறைய போடுறாங்க. அதன் மூலம் 100 கிலோ வாட் என்ற அளவில் மட்டும் தான் மின்சாரம் எடுக்க நாம் (அரசு) அனுமதிக்கிறோம். வெயில் குறைவாக […]
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக வெடித்துள்ள நிலையில், இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், மற்றோரு பக்கம் பாஜக ஆதரவு தெரிவித்தும் வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொகுதி மறுசீரமைப்பு குறித்து சில விஷயங்களை பேசினார். இது குறித்து பேசிய அவர் ” தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு அரசியல் சூழ்ச்சியாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் […]
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய பாஜக அரசு முயல்கிறது என்றும், இதன் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என்றும், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை பொருட்டு தமிழக அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினர். மேலும், கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று மக்கள் தொகை […]
சென்னை : திருச்சி மாவட்டத்தில் நேற்று பாஜக சார்பில் தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். அப்போது விழாவில் பேசிய எச்.ராஜா அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர் ” அமைச்சர் சேகர்பாபு என்னை பொறுத்தவரை பீடை. அவரை சிறைக்கு அனுப்பும் வரை நான் ஓய்வே மாட்டேன்” என பேசியிருந்தார். அதைப்போல, அடுத்ததாக பேச […]
திருச்சி : நேற்று திருச்சியில் பாஜக சார்பில் புதிய கல்வி கொள்கை பற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசினார். தமிழக பட்ஜெட் மீதான விமர்சனம், தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் பற்றி விமர்சனம் என ஆவேசமாக பேசினார். அப்போது புதிய தேசிய கல்வி கொள்கை பற்றி தனது கருத்துக்களை குறிப்பிட்டார். இதுவரை 18 நாளில் மும்மொழிக்கு ஆதரவாக […]
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிகாக மாறியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடை பெறுகிறது. இந்த கூட்டத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்று இந்த விவகாரம் குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். […]
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நிறைவு பெற்றது. இதன், 2வது கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தொகுத்து வழங்கினார். இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் […]
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், […]
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் தென்னிந்திய முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், பங்கேற்று பேசிய கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியது […]
சென்னை : சென்னையில் தற்போது நடைபெற்று வரும் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களின் முதல்வர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் தொடக்க உரையாக தமிழ்நாடு முதலமைச்சார் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அதை தொடர்ந்து துணை முதலவர் உதயநிதி மறுசீரமைப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினார். பின்னர், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உரையாற்றினார். அவரது உரையில், முக்கியமாக தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் […]
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம், இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அதன்படி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மமற்றும் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய […]
சென்னை : சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பரிசு அளித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார். பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி […]
சென்னை : சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில்கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பல்வேறு அரசியல் […]
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. மத்திய அரசு 2026-ல் மக்களவைத் தொகுதிகளை மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால், மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா ” மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடுகிறது என விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” தமிழகத்தில் பாஜக மட்டும் ஆட்சிக்கு வந்தது என்றால் தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை நிச்சயமாக உறுதி செய்வோம். தற்போது எங்களுடைய […]
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக, நாம் தமிழர், தமாகா தவிர மற்ற கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டு இதில் தொகுதி […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். அப்போது, ஒரு மடிக்கணினி 10 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது தரமானதாக இருக்குமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த அவர் ” ஒரு மடிக்கணினி ரூ.20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மதிப்பீடு செய்யப்பட்டு அதற்காக தற்போது 2 ஆயிரம் கோடி ரூபாய் […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில் இன்று பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். அப்போது தமிழக அரசு அறிவித்த மடிக்கணினி திட்டம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். ஒரு மடிக்கணினி 10 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது தரமானதாக இருக்குமா? என கேள்வி எழுப்பினார். ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், […]