‘ஒற்றை தலைமை ஓபிஎஸ் ஐயா’-அதிமுக தொண்டர்கள் முழக்கம்..!

Default Image

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வரும்பொழுது அங்கிருந்த தொண்டர்கள் ஒற்றை தலைமை ஓபிஎஸ் என முழக்கமிட்டதால் அவ்விடத்தில் சில சலசலப்புகள் ஏற்பட்டது.

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலுக்கு பின் முதலாவது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நேற்று நடத்தினர். சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்தக்கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளின் கூட்டத்தில் முக்கியமாக சில முடிவுகள் எடுக்கவும், வருகின்ற உள்ளாட்சி தேர்தலை குறித்து கலந்தாலோசிக்கவும் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரும்பொழுது ஒற்றை தலைமை என முழக்கமிட்டுள்ளனர் தொண்டர்கள். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்