சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன, இதுபோன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது வருத்தம் மற்றும் கண்டனத்திற்கு உரியது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது பதவிவில், “தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம். சங்க […]
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி அதிமுக குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சென்னை எழும்பூரில் நடைபெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் “விரைவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது என்கிற வகையில் […]
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அது மட்டும் இல்லாமல், இது மதுரை மக்களுக்கு கிடைத்த […]
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமான அரிட்டாபட்டி முழுமையாக அழியும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசின் அர்ப்பணிப்பு மற்றும் இப்பகுதியின் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டங்ஸ்டன் விவகாரத்தில் மக்களின் உணர்வுக்கும், […]
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயுத்தமாகி வருகின்றனர். இந்த முறை நடிகர் விஜய்யின் தவெகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் போட்டிகள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. இத்தகவலை அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் S.P.வேலுமணி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். வரும் 31ம் தேதி கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்க […]
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது சட்டப்பேரவைக்கு கருப்பு உடை அணிந்து கொண்டு வருகை தந்த அதிமுக குறித்து பேசியதோடு அவர்களை நோக்கி தன்னுடைய கேள்விகளையும் ஆதங்கத்தோடு எழுப்பினார். இது குறித்து பேசிய அவர் ” எதிர்கட்சியான அதிமுக சார்பில் கருப்பு உடை அணிந்து வந்த போது எனக்கு உண்மையில் கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. அதனை பார்த்துவிட்டு இப்படியாவது கருப்பு சட்டை […]
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது. அண்ணா பல்கலைகழக சம்பவம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. மேலும், பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த சவாலுக்கு எடப்பாடி பழனிசாமி மௌனம் காத்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்: யார் அந்த சார் என கேட்டால் எதற்கு பதற வேண்டும்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுப்போம். சபாநாயகர்: ஏற்கெனவே இந்த […]
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில், இந்த வழக்கில் சார் என்ற நபரை, மாணவி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருந்தார். அந்த ‘சார்’ யார் என்பது இன்று வரை தெரியா புதிரா இருந்து வருகிறது. இதனால், அவர் யார் என்று கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் கடும் […]
சென்னை : கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சனம் செய்து பல விஷயங்களை பேசியிருந்தார். குறிப்பாக, கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா?மன்னர் ஆட்சியில் தான் மன்னருக்கு பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். அதன்பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் முடி சூட்டிக்கொண்டார். இப்போது ஒரு வாரிசை கொண்டு வந்து முடி சூட்டிக்கொள்ள துடிக்கிறார்கள். மக்களை […]
சென்னை : நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் திமுகவை விமர்சனம் செய்து பேசியிருந்தார். அதில் அவர் பேசியதாவது “மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கொள்ளை புறம் வழியாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான். கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா?மன்னர் ஆட்சியில் தான் மன்னருக்கு பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். […]
சென்னை : வானகரத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான். நடைபெறவுள்ள 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என திமுக பகல் கனவு காண்கிறது. மு.க ஸ்டாலின் கனவு நிறைவேறாது. கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? மன்னர் ஆட்சியில் தான் […]
சென்னை : இன்று சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரிவிதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ” கூட்டணி என்பது வரும் போகும், ஆனால் கொள்கை என்பது எப்போதும் நிலைத்து நிற்கும். கூட்டணி இல்லாமல் ஆட்சி […]
சென்னை : அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்தவுடன் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டவுடன் பல தீர்மானம் நிறைவேற்றமும் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 3,500 அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாகவும், மேலும் சிலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தமாக 8,000 பேருக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. 750 பேருக்கு மேல் சைவ உணவும், 6000 பேருக்கு […]
சென்னை : அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்தவுடன் தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தில், சமீபத்தில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, அரசியல் தலைவர்களான எஸ்.எம் கிருஷ்ணா, சீதாராம் யெச்சூரி, ஈ. வெ. கி. ச. இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து முக்கியமாக, மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை மத்திய […]
சென்னை: மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, நேற்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் காரசார விவாதங்கள் நடந்தன. மேலும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததால், தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானம் நேற்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் […]
சென்னை : பல்லாவரம் அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததாக கூறப்பட்டு 23 பேர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீரை அருந்திய அவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த சூழலில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உண்மையில் குடிநீரில் கழிவு நீர் கலந்துள்ளாதா? என்பது பற்றிய […]
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில் கழக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மேடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாகவும் மாறியது. முதற்கட்டமாக, அதிமுக மாவட்ட செயலாளர் பணிகளை செய்யவில்லை என கொள்கை பரப்புச் செயலாளர் புகார் கூறியதால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் மாவட்ட செயலாளர் […]
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர் திமுகவில் செய்தி தொடர்பு துணைச் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது 3-வைத்து மகன் வெங்கட்ராம் திருமணம் திருப்பதியில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்று விட்டு வீடு திரும்பிய நேரத்தில், மலையில் இருந்து இறங்கிய போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த துயரைச் சம்பவம் […]
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அங்கேயே அவர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதிமுக பிளவுபட்டபோது ஓபிஎஸ் அணியில் இருந்த அவர், கருத்துவேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்தார். அவருக்கு சமீபத்தில் தான், […]
சென்னை : இன்று (அக்டோபர் 17) அதிமுக கட்சியின் 53வது ஆண்டுவிழாவானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் , தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரிடம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை சேர்க்கும் விவகாரம் […]