அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனுக்கு எதிராக மேல்முறையீடு!

Default Image

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நடிகை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் மணிகண்டன் மீது பாதிக்கப்பட்ட நடிகை புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், 2021 ஜூன் 20-ம் தேதி மணிகண்டன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மணிகண்டனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி நிபந்தையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்