சேலத்தில் பரபரப்பு.! அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை.!

ADMK Person M Shanmugam

சேலம்: கொண்டலாம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் என்பவர் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி பகுதி மாரியம்மன் கோயில் 4வது தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). அதிமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு அம்பாள் ஏரி ரோடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு வந்துள்ளார்.

அப்போது சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோயில் தெரு அருகில் வந்து கொண்டு இருக்கையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மர்ம நபர்கள் சிலர் சண்முகத்தை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட கூறிய ஆயுதங்களால் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமுற்ற சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த சண்முகம் ,கடந்த 2011 முதல் 2016 வரையில் கொண்டாலம்பட்டி மண்டல தலைவராக பொறுப்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது. தகவல் அறிந்ததும் காவல்துறையினர் , சண்முகம் குடும்பத்தினர், அதிமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து சண்முகம் ஆதரவாளர்கள் உடலை அங்கிருந்து அகற்ற மறுத்துள்ளனர் என கூறப்படுகிறது.

பின்னர் , சண்முகம் ஆதரவாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி சண்முகத்தின் உடலை அங்கிருந்து அகற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சேலம் மாநகர காவல்துறையினர் தற்போது கொலையாளிகளை பிடிக்க விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
Today Live - 25032024
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh
LPG Lorry Strike
thambi ramaiah manoj bharathiraja
shreyas iyer and rohit
US President Donald Trump