ரஃபேல் போர் விமானத்தை ரூ.1600 கோடிக்கு வாங்க முடிவு செய்தது ஏன்?

Default Image

ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை 526 கோடி ரூபாயாக நிர்ணயிக்குப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறினார்.

ஆனால், பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று வந்த பிறகு, ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த விலைக்கு வாங்க பாஜக அரசு முடிவு செய்தது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்ட நிலையில், 36 ஆக குறைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, இன்று வரை ஒரு ரஃபேல் போர் விமானம் கூட இந்தியாவிற்கு வரவில்லை என்றார். அனில் அம்பானி 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ள ஒரு தொழிலதிபர் என்றும் அவர் வினவினார்.

ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட 10 நாட்களில் உரிமம் கொடுத்தது ஏன், அரசு நிறுவனமான ஹெ.ஏ.எல்லிற்கு கொடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தது ஏன் என்றும் ராகுல்காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்