அரசு நிதியை தவறாக பயன்படுத்திய ஐந்து பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

Default Image

கர்நாடக அரசின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக 5 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், மொத்தம் ரூ.5 கோடி அபராதமும் விதித்து கர்நாடக சிறப்பு புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த வியாழன் அன்று கேப்பால்லி ஆனந்த், எச்.எஸ்.நாகலிங்கசுவாமி, சந்திரசேகர், எச்.கே.நாகராஜா மற்றும் கே.பி.ஹர்ஷன் ஆகிய 5 பேர் குற்றவாளிகள் என்றும், மொத்தம் ரூ.5,02,75,000 அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் தீர்ப்பளித்தார்.

மாண்டியா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு (முடா) இழப்பீடாக ரூ.5.02 கோடி செலுத்த தவறினால், குற்றவாளிகள் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். இந்த வழக்கில், ஐந்து பேரும் முடா நிறுவன ஆணையர் வழங்கிய தலா 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து காசோலைகளை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்