முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவை கைது செய்தது சிபிஐ!

kavitha

Kavitha: திகார் சிறையில் உள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கைது செய்தது சிபிஐ. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 15ம் தேதி தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே.கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைதை தொடர்ந்து கே.கவிதாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இதன்பின் அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் … Read more

11 கோடி ரூபாய் பாக்கி.! இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்.! 

Income Tax Department notice to CPI

CPI : இந்திய கம்யூனிஸ்ட் கட்டி 11 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியா முழுக்க மக்களவை தேர்தல் அறிவித்து அதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், வருமான வரித்துறை பிரதான அரசியல் கட்சிகள் முறையாக வரிசெலுத்தவில்லை என கூறி நோட்டீஸ் அனுப்பி வருகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி முறையாக வருமான வரி செலுத்தவில்லை என கூறி, சுமார் 1800 கோடி ரூபாய் … Read more

வணிகத்துறை அதிகாரிகள் 3 பேரை கைது செய்த சிபிஐ..!

புதுச்சேரியில்  இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலையிடம் வணிகத்துறை அதிகாரிகள் ரூ.10 லட்சம்  லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம்  புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து, 100 அடி சாலையில் உள்ள வணிக வரி வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட  சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த அலுவலகத்தில் ஜெயபாரதி என்பவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இன்று காலை முதல் வணிக வரி ஆணையர் முருகானந்தம்,  ஆனந்தன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு பின்னர் கைது செய்தனர். இந்நிலையில், … Read more

எண்ணூர் எண்ணெய் கசிவு… சிபிசிஎல் நிறுவனம் முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.! CPI முற்றுகை போராட்டம்.!  

Ennore Oil Spill - CPI State secretary Mutharasan

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் பெட்ரோலியம் நிறுவனமான சிபிசிஎல் (CPCL) நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கழிவு, வெள்ளத்தில பக்கிங் கால்வாய் வழியாக, கொசஸ்தலை … Read more

என் வாழ்கையில இதெல்லாம் நடக்கும்னு நான் நினைத்து கூட பார்க்கல.. விஷால் பரபரப்பு.!

Vishal

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி திரையரங்களில் வெளியான திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த திரைப்படம் இந்தியில் தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்து இருந்தார். இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை மொழி மாற்றம் செய்த படத்துக்கு தணிக்கை சான்று வாங்க சென்றபோது ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்திருந்தார். … Read more

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி கைது..!

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவரதீபக்கை கைது செய்த சிபிஐ.  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் பதவியில் இருந்த போது, வீடியோகான் குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது கணவர் தீபக் கோச்சர் பயன்பெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி இது தொடர்பாக கடந்த மே மாதம் 2018 ஆம் ஆண்டு விசாரணையை … Read more

குட்கா முறைகேடு வழக்கு.! சிபிஐக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்.!

குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  குட்கா முறைகேடு வழக்கானது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் குட்கா கடை உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ ஏற்கனவே நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டிருந்தது. முதலில் நிராகரித்த நீதிமன்றம் அதற்கு தற்போது அவகாசம் கொடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள குற்றப்பத்திரிகைகளில் உள்ள தவறுகளை திருத்தவும், … Read more

2019, 2021 தேர்தலில் கூட்டணி வெற்றிக்குப் பாடுபட்டவர் உதயநிதி.! சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கருத்து.!

2019, 2021 தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட்டவர் உதயநிதி. அமைச்சர் பதவியில் அவர் சிறப்பான பங்களிப்பை அளிப்பார். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.  இன்று தமிழக அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் நிகந்துள்ளது. முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் மாற்றம் கண்டுள்ளனர். மேலும், புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். இதற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். … Read more

தமிழக ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார் .! சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம்.!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்துகிறார் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.  ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கான சட்ட மசோதாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் கையெழுத்திடாமல் இருக்கிறார். அவர் கையெழுத்திட்டால் தான் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அந்த சட்டம் அமலுக்கு வரும். அதனால், இன்னும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கையெழுத்திடாத ஆளுநருக்கு எதிரான குரல் தமிழகத்தில் நாளுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி சிபிஐ இன்று ஆர்ப்பாட்டம்.!

ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி இன்று  காலை 10மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை இன்று முற்றுகையிட போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக  மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்து  இருந்தார். அதன்படி, இன்று ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி  காலை 10 மணிக்கு ஆளுநர் … Read more