தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,98,231ஆக உயர்வு!

Default Image

தமிழகத்தில் இதுவரை கொரோனவால்  பாதித்தோரின் எண்ணிக்கை 34,47,006 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இந்தாண்டு தொடக்கம் முதல் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 34,47,006 ஆக அதிகரித்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 2,153 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33,98,231-ஆக அதிகரித்துள்ளது. கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆகும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,993ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10,782 ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்