கோவில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன.? பதில் அளிக்க ஒரு வாரம் கெடு.!

Default Image

தமிழகத்தில் உள்ள பிரதான கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகள் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள பிரதான கோவில்கள் அனைத்திலும், பின்பற்றப்படும் ஆகம விதிகள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் வினா படிவம் ஒன்று இணைக்கப்பட்டு இருக்கும். அதில், கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உரிய பதில் அளித்து அதனை அனைத்து மண்டல இணை இயக்குனர்களும் சேகரித்து அனுப்ப வேண்டும் எனவும், அதற்கான கால அவகாசம் ஒரு வாரம் எனவும் குறிப்பிட்ட பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்