கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முன்பு பொதுமக்கள் போராட்டம்!

More than 100 locals blockade the entrance to the Kudankulam nuclear power plant.

கூடங்குளம் அணுமின்நிலைய வாசலில் 100க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் முற்றுகை போராட்டம்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து, 1000க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் மக்களுக்கு பணி வழங்காமல், வெளி மாநிலத்தவர்களுக்கு தந்ததை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்ட 139 பேரில் உள்ளுறை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என போராட்டக்காரர்கள் குற்றசாட்டுகின்றன. திமுக மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர்களுடன் உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்துகின்றன. இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.