ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் தர வேண்டும் – ஈபிஎஸ்

Default Image

தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு கணக்கெடுக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.

ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் தர வேண்டும். பயிர் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு கணக்கெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்