முதல்வருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி – விசிக தலைவர் திருமாவளவன்

அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த முதல்வருக்கு தொல் திருமாவளவன் நன்றி.
அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். முதல்ரவரின் இந்த அறிவிப்பிற்கு பேரவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட பலரும் வரவேற்பு அளித்தனர். அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும், அந்நாளில் உறுதிமொழி ஏற்கவும் அறிவிப்புச் செய்துள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுப்புகள் கொடுக்குறது நீக்குறதுலாம் செல்லாது நான் இருக்கேன்” -அன்புமணி ராமதாஸ் அதிரடி!
May 31, 2025
“பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நான் காரணமா? இதை கேட்டு கண்ணீர் வடித்தேன்” – ஜி.கே.மணி வேதனை!
May 31, 2025