நீட் தேர்வு ரத்து – “பஞ்ச் டைலாக் பேசுவது போல் கிடையாது”…விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

நீட் தேர்வுகள் குறித்து த.வெ,க. தலைவர் திமுகவை விமர்சனம் செய்திருந்த நிலையில், அவருக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

sivasankar dmk tvk vijay

சென்னை :  கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என கூறிவிட்டு தற்போது அதனை செய்யாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றிவிட்டதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றம்சாட்டியிருந்தார். தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அவர் தெரிவித்திருந்ததாவது ” கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள்.

ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” எனவும் விஜய் தன்னுடைய பதிவில் கூறியிருந்தார்.

விஜய் வைத்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக  பேசிய அமைச்சர் சிவசங்கர் ” நீட் தேர்வு ரத்து – சினிமாவில் யாரோ எழுதும் பஞ்ச் டைலாக் பேசுவது போன்ற சூழல் கிடையாது” என பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது பத்திரிக்கையாளர்கள் விஜய் வைத்த விமர்சனம் பற்றி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர் ” நீட் தேர்வு என்பது இன்று புதிதாக வந்த விஷயம் இல்லை. நீட் என்பது மிகப்பெரிய போராட்டம். நீட் தேர்வு வந்தபோதே கலைஞர் அதனை தடுத்தி நிறுத்தினார். கலைஞருக்கு பிறகு மறைந்த அம்மையார் ஜெயலலிதாவும் தடுத்து நிறுத்தினார். அதன்பின் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த நீட் தேர்வானது நடைமுறைக்கு வந்தது.

எனவே, அதில் இருந்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தொடர்ச்சியாக திமுக போராடி கொண்டு இருக்கிறது. குறிப்பாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாப்களின் 1 கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவர் வரை கொண்டு சென்று இருக்கிறார். இது மத்திய அரசை எதிர்த்து நடக்கும் ஒரு போராட்டம். மத்திய அரசால் தான் இதனை ரத்து செய்யமுடியும். சட்டம் புரிந்தால் மட்டும் தான், நாட்டு நடைமுறை புரிந்தால் தான், பேசவே முடியும். இது சினிமாவில் யாரோ எழுதி கொடுக்கும் வசனங்களை பேசும் விஷயம் கிடையாது” என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசும்போது ” திராவிட இயக்கத்தை குறித்து மற்றவர்கள் கிண்டல் செய்வதற்கு யோக்கியதை கிடையாது. இன்றைக்கு வந்துவிட்டு நினைத்தையெல்லாம் பேசிவிட்டு போக இது ஒன்றும் திரைப்படம் இல்லை. இது அரசியல். மக்களுக்காக போராடியும், ரத்தம் சிந்திய காரணத்தால் ஆட்சியில் இருக்கிறோம்” எனவும் சிவசங்கர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 18042025
SRH Lose MI in ipl 2024 april 17
ADMK Chief secretary Edappadi Palanisamy
Nainar Nagendran - Annamalai
Mumbai Indians
SRHvsMI