கிருஷ்ணகிரி : விக்கிரவாண்டி வி.சாலையில் விஜய் நடத்திய பிரமாண்ட த.வெ.க மாநாட்டை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்திருந்தார்கள். அதில் ஒருவர் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரன். இவர் மாநாட்டில் கலந்து கொள்ள அந்த மாவட்டத்தில் இருந்து மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் வந்த வேனில் வருகை தந்துள்ளார். பிறகு மாநாடு நடந்து முடிந்தபின் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் எந்த இடத்தில் தாங்கள் வந்த வேன் பார்க்கிங் செய்யப்பட்டது என்பது தெரியாமல் காணாமல் போகியுள்ளார். தன்னுடைய […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27-ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்தது. மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசிய பல விஷயங்களும் அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது. குறிப்பாக, அவர்கள் பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா.? நீங்களும் அவர்களுக்கு ஒன்னும் சளச்சவங்க இல்ல என திமுக அரசை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் விமர்சித்துப் பேசியிருந்தார். Read More- “அவங்க பாசிசம்னா., நீங்க பாயாசமா.?” திமுகவை […]
சென்னை : கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் வெயிலின் தாக்கம், விபத்துகள் என சில உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்து தவெகவினரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சென்னை பாரிஸ் கார்னர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மாநாட்டிற்கு புறப்படுகையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அடுத்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் […]
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். முதல் மாநாட்டில் பேசிய அவர், “அவங்க பாசிசம்னா., நீங்க என்ன பாயாசமா.?., குடும்ப ஊழல் ஆட்சி, திராவிட மாடல் என ஏமாற்றுகின்றனர் ” என ஆளும் திமுக அரசை நேரடியாகவே கடுமையாக விமர்சித்தார். மேலும், ஆட்சி – அதிகாரத்தில் பங்கு என்று கூட்டணிக்கும் மறைமுக அழைப்பு விடுத்தார். விஜயின் இந்த […]
திருச்சி : நேற்று விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட அதிகளவு கூட்டம் கூடியதால் மாநாட்டை முன்கூட்டியே தொடங்கியது. இந்த மாநாட்டில் 13 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என தகவல் வெளியானது. திருச்சியில் இருந்து த.வெ.க மாநாட்டுக்கு சென்ற கார் உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்பில் மோதிய விபத்தில் இந்த விபத்தில் சீனிவாசன், தவெக நிர்வாகி கலைக்கோவன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று […]
சென்னை : விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டில் திமுக குறித்து விஜய் பேசியதற்கு திமுக ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றி வருகிறனர். அதாவது, திமுக தான் அரசியல் எதிரி.. பாஜக கொள்கை எதிரி என விஜய் வெளிப்படையாக பேசியிருந்தார். மேலும், “திராவிட மாடல் என பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள், என்ன தான் மோடி மஸ்தான் வேலை செய்தாலும் ஒன்னும் நடக்கப்போவதில்லை. திராவிட மாடல் என்ற பெயரில், பெரியார், அண்ணா பெயரில் நம்மை சுரண்டி கொள்ளையடிக்கும் குடும்ப, சுயநல கூட்டம் தான் […]
சென்னை : தவெக கட்சியின் முதல் மாநில மாநாடானது நேற்று விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கிட்டத்தட்ட 13 லட்சம் தொண்டர்கள் வருகை தந்தாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் அனல் பறக்க பேசினார். அவரது அந்த மேடைப் பேச்சின் எதிரொலியாக பல கட்சித் உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என அனைவரும் வாழ்த்துகளை அவர்களது எக்ஸ் தளத்தில் தெரிவித்து வந்தனர். […]
சென்னை : நேற்று விக்ரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். அதன்படி, இன்று திமுக திடிரென மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரான சரவணன்,தமிழக முதல்வரான மு.க. ஸ்டாலினுக்கு இன்று கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி இருக்கிறார். அந்த மனுவில்,”தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில் […]
சென்னை : விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்ற தவெகவின் முதல் அரசியல் மாநாடு சில குறைபாடுகள் இருந்த போதிலும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய்யின் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, அவரின் பேச்சு எளிமையாகவும், இளைஞர்களுக்கு புரியும் மொழியிலும் இருந்தது. அந்த வகையில், அவரது பேச்சு எளிமையாக இருப்பதாக பலரும் சோஷியல் மீடியாவில் குறிப்பிடுகின்றனர். அதே நேரம், விஜய்யின் பேச்சு மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் பல மாற்றங்கள் நிகழலாம். குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக vs […]
சென்னை : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தவெக கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. “வெற்றி வெற்றி வெற்றி” எனத் தொடங்கும் இப்பாடலை தெருக்குரல் அறிவு உடன் இணைந்து விஜய் பாடியுள்ளார். திருவள்ளுவர் வழியில் தவெக கொள்கை தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை நமது அரசியல் வழிகாட்டியாக ஏற்போம் என விஜய் விளக்கமளித்தார். இந்த நிலையில், தவெக கொள்கை விளக்க பாடலை உருவாக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ள தெருக்குரல் […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்ற தவெகவின் முதல் அரசியல் மாநாடு சில குறைபாடுகள் இருந்த போதிலும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய்யின் பேச்சு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் பேச்சு எளிமையாகவும், இளைஞர்களுக்கு புரியும் மொழியிலும் இருந்தது. தவெக கொள்கை விளக்க மாநாட்டில் விஜய்யின் பேச்சு மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, கடவுள் மறுப்பு தவிர்த்து பெரியாரின் மற்ற கொள்கைகளை ஏற்பதாக அறிவித்திருப்பது மக்களின் மனநிலையை அவர் அறிந்திருப்பதைக் காட்டுகிறது. இந்நிலையில், அரசியல் […]
மதுரை : மாநாட்டில் விஜய்யின் பேச்சு ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது. த.வெ.க கட்சியானது 5 கொள்கை தலைவர்கள் வழியில் அரசியல் அமைக்க உள்ளதாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார். இதனிடையே, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை காந்திபுரம் பகுதி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். அப்பொழுது, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைகளை இன்று விஜய் அறிவித்துள்ள நிலையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “திராவிடமும், தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என்கிறார் […]
சென்னை : விஜயின் தலைமையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் பல்வேறு அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக பேசி தனது முதல் அரசியல் மாநாட்டு உரையை நிகழ்த்தியுள்ளார். அதில். பிறப்பொக்கும், எல்லா உயிர்க்கும் என அனைவரும் சமம் என்றும், கூட்டணியில் ஆட்சியில் பங்கு, சாதி மத வர்க்க பிரிவினைவாதத்திற்கு எதிர்ப்பு என பல்வேறு கருத்துக்களை பேசியிருந்தார். அவர் பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட த.வெ.க தலைவர் விஜய் ” மக்கள் விரோத ஆட்சிய திராவிட மாடல் அரசுனு சொல்லிட்டு மக்களை ஏமாத்துறீங்க. எங்களுக்கு எந்த சாயமும் நீங்க பூச வேண்டாம். நாங்க ஏற்கனவே எங்களுக்கு ஒரு கலர் கொடுத்திருக்கோம். ஏ.பி, சி.டி டீம்னு எங்க மேல அவதூறு பரப்ப முடியாது. திராவிட மாடல்னு சொல்லி., தந்தை பெரியார், அறிஞர் […]
விழுப்புரம் : த.வெ.க மாநாடு இன்று நடைபெறுவதை முன்னிட்டு இந்த அளவுக்கு கூட்டம் வருமா? என பலரையும் வியக்க வைக்கும் வண்ணம் தவெக தொண்டர்கள் கூட்டம் இன்றுஅலைமோதியது. இன்று அதிகாலை முதலே பலரும் கூட்டம் கூட்டமாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தனர். காலை 9 மணி நிலவரப்படி 1.50 லட்சம் மக்கள் கூடியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து மாநாடு நடைபெறும் நேரம் நெருங்க நெருங்கமாநாட்டிற்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டிருந்தது. குறிப்பாக, மாநாடு தொடங்கியவுடன் காவலர்கள் கொடுத்த […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக கட்சித் தலைவர் விஜய் மிக ஆவேசமாக தனது முதல் அரசியல் உரையை பேசி முடித்தார். அப்போது மதவாத பிளவுவாத அரசு பாசிச அரசு என பாஜகவையும், முகமூடி அரசு என ஆளும் திமுக அரசையும் மறைமுகமாகவும், நேரடியாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார். விஜய் பேசுகையில், “மதவாத அரசியல் பேசுறவங்கல நாம கண்டுபிடிச்சிறலாம். ஆனால்., ஊழல் […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பிரமாண்ட மாநாடு தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கும் அளவுக்கு விக்ரவாண்டி வி.சாலையில் படு பிரமாண்டமாக நடைபெற்றது, மொத்தமாக, மாநாட்டிற்கு சுமார் 13 லட்சத்தி 80 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாநாட்டில் கலந்துகொண்ட கட்சித் தலைவர் விஜய் தன்னுடைய தொண்டர்களுக்குக் குட்டி கதை முதல் கட்சியின் கொள்கைகள் என பல விஷயங்களைப் பற்றியும் பேசினார். அதில் மிகவும் முக்கியமாக தன்னுடைய தங்கை இறப்பு தனக்கு எவ்வளவு பாதித்தது? என்பது […]
விழுப்புரம் : த.வெ.கவின் பிரமாண்ட மாநாடு இன்று விக்கிரவாண்டி வி சாலையில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கிட்டத்தட்ட 8 லட்சம் மக்கள் வருகை தந்திருக்கிறார்கள். அலைமோதும் மக்கள் கூட்டத்துடன் விஜயின் பேச்சுக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொண்ட கட்சித் தலைவர் விஜய் அரசியல் ஒரு பாம்பு எனத் தனது பேச்சை ஆரம்பித்து குட்டிஸ்டோரியை பேசத்தொடங்கினார். இது குறித்து அவர் பேசியதாவது ” ஒரு குழந்தை தன்னுடைய அம்மாவைப் பார்த்து அம்மா என்று சொல்லும் போது […]
விழுப்புரம் : தவெக முதல் மாநாடு இன்று பிரம்மாண்டமாக தொடங்கிய நிலையில், தமிழக முதலில் அக்கட்சியின் தலைவர் 100 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றினார். அதன்பின், கட்சியின் செயல்திட்டம் மேடையில் அறிவிக்கப்பட்டது. அந்த செயல்திட்டத்தில், “சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை. அறிவியலுக்கு எதிரான சிந்தனைகள் நிராகரிக்கப்படும். மதுரையில் தலைமை செயலக கிளை ஏற்படுத்தப்படும். சாதி, மதம், நிறம், மொழி, இனம், பாலின பாகுபாடின்றி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். மாநில தன்னாட்சி வேண்டும். மது, போதை இல்லாத […]
விழுப்புரம் : த.வெ.கவின் பிரமாண்ட மாநாடு இன்று விக்கிரவாண்டி வி சாலை பகுதியில் சரியாக 3 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. மாநாடு தொடங்கியதை தொடர்ந்து சரியாக 4 மணி அளவில் தொண்டர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் மேடைக்கு வருகை தந்தார். அப்போது, கட்சி பாடல் ஒலிக்கபட்டது. அதன்பிறகு, மாநாடு நடைபெறும் மேடைக்கு வருகை தந்தார். வந்தவுடன் தனது தொண்டர்களுக்கு கை அசைத்து நலம் விசாரித்தார். நடைபாதையில் கட்சித் தலைவர் விஜய் நடந்து கொண்டிருக்கும் போது மேடை பக்கவாட்டு தடுப்புகளை […]