மாண்டஸ் புயல் எதிரொலி.! சென்னையில் 11 விமான சேவைகள் பாதிப்பு.!

Default Image

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 2 விமானங்கள் மற்றும் விமான நிலையத்திற்கு வரும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழக்தை நெருங்கி வருவதன் காரணமாக நாளை வடதமிழகம் பகுதியில் கனமழை பெய்ய உள்ளது என்பதால், அதனை எதிர்கொள்ள பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து, விமான சேவைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமானநிலையத்திற்கு வரும் தூத்துக்குடி மற்றும் ஷீரடியில் இருந்து வரும் விமானங்கள் , சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் ஷீரடி வரை செல்லும் விமானங்களும் என 4 மாவட்டங்களுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் 11 விமானங்கள் தாமதமாக செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்