தெரிஞ்சிருந்தா தமிழிசைக்கு போன் போட்டு பேசிருப்பேன்… துரைமுருகன் மரண கலாய்.!

Tamilisai Soundarajan - DuraiMurugan

South Chennai : தென்சென்னையில் தமிழிசை போட்டியிடுவதை கிண்டல் செய்த அமைச்சர் துரைமுருகன்.

தமிழகத்தில் தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுக்கிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.

கடந்த 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் தான் வெற்றி பெற்று இருந்தார். கடந்த மக்களவை தேர்தலில் , தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டு திமுக எம்பி கனிமொழியிடம் தோல்வி பெற்றார். பின்னர் தான் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநராகவும் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்று இருந்தார். தற்போது மீண்டும் பொதுத்தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் களமிறங்குகிறார்.

இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் தென் சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய துரை முருகன் , போயும் போயும் தென் சென்னையிலா தமிழிசை போட்டி போடுறாங்க.? ஐயோ பாவம் தெரிஞ்சிருந்தா நான் தமிழிசைக்கு போன் போட்டு பேசி இருப்பேன் .

நீங்க நிக்க போறீங்கனா வேற எதாவது தொகுதி கூட சொல்லிருகலாம். இந்த தென் சென்னை தொகுதி திமுக ஜெயிக்கிறதுக்காக பொறந்த தொகுதி. அரசனை நம்பி புருஷனை கைவிட்டு விட்டார். இங்க உள்ளூர்லேயே ஓணான் பிடிக்க தெரியாத ஒருத்தன் வெளியூரரில் யானை பிடிக்க போனானாம் என கிண்டலாக விமர்சனம் செய்தார் அமைச்சர் துரைமுருகன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்