#JustNow: மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை.. நாளை முதல் அமல்! – ஆட்சியர் உத்தரவு

Default Image

கொடைக்கானலில் நாளை முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமல் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 10 டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும். இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் பின்னர் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை ஒப்படைத்து,  ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுசூழலை பாதுகாப்பதற்கு தொடர் முயற்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகத்தினர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. காலி மதுபாட்டில்களை சாலையோரங்களிலோ, விளைநிலங்களிலோ மற்றும் வனப்பகுதிகளிலோ வீசி செல்வதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்