கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் பத்திரமாக மீட்பு

Kodaikanal: கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் மீட்பு மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு பாறையின் விளிம்பிலிருந்து செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, தன்ராஜ் என்ற … Read more

நடிகர் பாபி சிம்ஹாவிற்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Bobby Simha

நடிகர் பாபி சிம்ஹா கடந்த ஆண்டிலிருந்து கொடைக்கானலில் இருக்கும் பேத்துப்பாறை பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். வீடு கட்டும் பணிகள் மற்றும் அதற்கான தொகையையும், கொடைக்கானலை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஜமீர், காசிம் முகமது ஆகியோர்களிடம் பாபி சிம்ஹா கொடுத்துள்ளார். அதன்பிறகு வீட்டை குறைவான தொகையில் கட்டி வைத்து இருந்தது  பாபி சிம்ஹாவுக்கு தெரிய வந்து ஒப்பந்ததாரர்க ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் … Read more

கொடைக்கானல் – வாகனங்களுக்கு தடை

கொடைக்கானல் ஏரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை வாகனங்களுக்கு தடை. கொடைக்கானல் ஏரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை யொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள், பொதுமக்கள் செல்லலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

மதுப்பிரியர்களே…இன்று முதல் அமல்;ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு!

கொடைக்கானலில் இன்று முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமல் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,10 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும்.இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் … Read more

#JustNow: மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை.. நாளை முதல் அமல்! – ஆட்சியர் உத்தரவு

கொடைக்கானலில் நாளை முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமல் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 10 டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும். இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த … Read more

நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் பூங்காக்களை மூட கோட்டாட்சியர் உத்தரவு!

நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் பூங்காக்களை மூட கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் மிக அதிக அளவில் கொரோனா பாதிப்பு காணப்பட்டதால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த சில வாரங்களாக அமலில் இருந்தது. இந்நிலையில், தற்பொழுது கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ளதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக சில சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானலிலும் சுற்றுலா தலங்களை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் பிரையண்ட் … Read more

இன்று மாலை 7 மணி முதல் கொடைக்கானல் செல்லும் வாகன போக்குவரத்து நிறுத்தம்!

புரேவி புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கு செல்ல கூடிய அனைத்து பேருந்துகளும் இன்று மாலை 7 மணி முதல் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தற்பொழுது புரேவி புயல் உருவாகி உள்ளதால், இது கரையை கடக்கும் நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் சிலவற்றுக்கு கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக … Read more

கொடைக்கானலின் மேற்புற தோற்றத்தை கண்டு ரசிக்க ஹெல்காப்டர் சேவை.!

கொடைக்கானலின் மேற்புற தோற்றத்தை கண்டு ரசிக்க தற்காலிக ஹெல்காப்டர் சேவையை தொடங்கவுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலின் முழு அழகை ரசிப்பதற்காக தற்காலிக ஹெலிகாப்டர் சேவையை தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது. கோயம்புத்தூரில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்களால் நடத்தி வரும் இந்நிறுவனம் தொடங்கும் ஹெலிகாப்டர் சேவை மூலம் ஏரி,கோக்கர்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட கொடைக்கானலின் மொத்த மேற்புற தோற்றத்தை ஹெலிகாப்டரில் 15 நிமிடங்கள் பறந்தவாறு கண்டு களிக்கலாம். மேலும், இதனை அவசர கால மருத்துவ … Read more

கொடைக்கானலில் நிறுத்திவைக்கப்பட்ட சைக்கிள் சவாரிக்கு அனுமதி..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொடைக்கானலில் கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் சவாரிக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விதித்த விதிமுறைகளை பின் பற்றி வாடகை சைக்கிள் கடைகளை திறந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வரலாம் -உதவி ஆட்சியர்!

கொடைக்கானலுக்கு வர விரும்பும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் இல்லாமல் வரலாம் என உதவி ஆட்சியர் சிவகுரு அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதிலும் அதிகரித்து வந்தாலும் தமிழக அரசு மக்களின் நிலை கருதி சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து கடந்த மாதமே இயக்கப்பட்டது, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ பாஸ் அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.  தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களை தவிர மற்ற இடங்களுக்கு இ பாஸ் இல்லாமல் … Read more