திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை தூண்டி விடுவதாக விளம்பரத்துறை அமைச்சர் பேச்சு.!

Default Image
  • தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.
  • அப்போது குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது போல் மக்களை தூண்டி விடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரித்து வந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கு பயந்து திமுக தலைவர் ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பது போல் மக்களை தூண்டி விடுவதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்