5-வது சுற்று முடிவிலும் முன்னிலை வகிக்கும் திமுக ..! பின்னடைவை சந்திக்கும் பாமக..!

Vikravandi Bi-Election

இடைத்தேர்தல் முடிவுகள்: நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக வேட்பாளரான அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.

கடந்த ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கி நடைபெற்று வருகின்றது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

இதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது அதில் திமுக வேட்பாளரான அன்னியூர் சிவா தான் முன்னிலை பெற்று வந்தார். அடுத்ததாக வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணப்படுகையிலும் முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று என தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வந்தார்.

தற்போது, 5 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில்,  திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 31,151 வாக்குகள் பெற்று சுமார் 19,600 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து  பாமக வேட்பாளர் சி.அன்புமணி 11,483 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 2,275 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் 20 சுற்று வாக்கு எண்ணிக்கையில் இன்னும் 15 சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்