#BREAKING: இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்!

Default Image

மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக காலை 10 மணிக்கு கூடுகின்றது சட்டமன்ற கூட்டத்தொடர்.

கடந்த 18ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் 2022 – 2023-ம் ஆண்டுக்கான முழுமையான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதன்பின் மறுநாள் வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 24ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், அமைச்சர்களின் பதில் உரைக்கு பின் தமிழக சட்டமன்றம் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த நிலையில், துறை வாரியான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்கு இன்று முதல் மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது. அதன்படி, காலை 10 மணிக்கு கூடும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது. துறை ரீதியான விவாதங்களுக்கு பதிலளித்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிடவுள்ளார்.

இதனிடையே, சொத்து வரி உயர்வு, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப அதிமுக, பாஜக திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nagpur Violence -Sunita Williams LIVE
Ilayaraja - Jagdeep dhankar
OGSambavam OUT NOW
Parilament session - Enforcement directorate
prithvi shaw
pm modi donald trump
sunita williams pm modi