#BREAKING: இலங்கை மக்களுக்கு நிவாரணம் – திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி அறிவிப்பு!

Default Image

இலங்கை மக்களுக்கு நிவாரணத்திற்காக திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்டும் என முக ஸ்டாலின் அறிவிப்பு.

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒருமாத ஊதியம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக நிதி உதவி அறிவித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில், அங்கு  சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகள் அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும்,  இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் தற்போது திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்