சென்னை : கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தான் அரசியல் செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் கல்வியை அரசியலாக்கக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிய கல்விக் கொள்கை மீதான தமிழக அரசின் […]
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 பேரை கைது செய்திருந்தது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், இலங்கை கடற்படையால் 10 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் […]
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 52% ஆக உயர்ந்துள்ளது. இதை பார்த்து அதிமுக கலகலத்து போயுள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்த அவர், பாஜக, அதிமுக சேர்ந்து வந்தாலும் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது என கருத்துக்கணிப்பில் […]
சென்னை : மத்திய பட்ஜெட் 2025-2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், அடுத்ததாக மாநில பட்ஜெட் தமிழகத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பட்ஜெட் குறித்தும், மற்ற சில முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் […]
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வழங்கி வைத்துவிட்டு இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் மத்திய அரசை விமர்சனம் செய்து சில விஷயங்களை பேசினார். இது குறித்து பேசிய அவர்” ஒன்றிய பாஜக அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் கூட்டணியில் இருக்கும் மாநில அரசுகளுக்கும், தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களுக்கு மட்டும்தான் திட்டங்களையும், நிதியையும் வழங்குவார்கள். கடந்த டிசம்பர் மாதம் […]
நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், ரூ.9,368 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைப்பதுடன், டாடா சோலார் தொழிற்சாலையையும் திறந்துவைக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னர் கார் மூலம் காலை திருநெல்வேலிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் முன்னிலையில் […]
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அது மட்டும் இல்லாமல், இது மதுரை மக்களுக்கு கிடைத்த […]
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமான அரிட்டாபட்டி முழுமையாக அழியும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசின் அர்ப்பணிப்பு மற்றும் இப்பகுதியின் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டங்ஸ்டன் விவகாரத்தில் மக்களின் உணர்வுக்கும், […]
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் […]
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின் இரும்பு மூடி உடைந்ததில், அதன் மீது நின்று கொண்டிருந்த அக்குழந்தை, அதற்குள் விழுந்து இந்த சோக சம்பவம் நேரிட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியான சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர்ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி […]
சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று தமிழக முதல்வர் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்தார். இந்தக் மலர் கண்காட்சி இன்று முதல் தொடங்கி ஜனவரி 11 வரை, 10 நாட்கள் நடைபெறுகிறது, காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். இந்தக் கண்காட்சிக்காகவே ஊட்டி, கோவை, கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை ஆகிய […]
திருச்சி : மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயரிலான நூலகத்தை திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதல்வர் வழங்கியதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் வலைத்தள பக்கதில் நன்றியும் தெரிவித்து இந்த திட்டத்திற்கான அரசு ஆணையையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் […]
சென்னை: சூப்பர் ஸ்டார்ப்பி ரஜினிகாந்த் இன்று தனது 74ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது 74 வயதில் 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில், 170 படங்களை கடந்து புகழின் உச்சத்தில் இருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ‘தளபதி’ படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், புதுப்படம் ரிலீஸ் போல ‘தளபதி’ படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர். பல திரையரங்குகளில் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது, இவரது பிறந்தநாளுக்கு […]
சென்னை: ஃபெஞ்சல் புயல், வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புயலின் காரணமாக, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதோடு நிலச்சரிவு ஏற்பட்டு பரிதாபமாக 7 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 12 பேர் இந்த ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், […]
சென்னை : சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்றிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பை முடித்துவிட்டு, இன்று (டிச.1) நாடு (தமிழகம்) திரும்பியுள்ளார். இந்நிலையில், மூன்று மாதத்திற்கு பின்னர் தமிழகம் திரும்பிய அண்ணாமலையை சென்னை விமான நிலையத்தில், ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் எழுப்பி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய பின், முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலையிடம், விஜய் அரசியல் வருகை குறித்து […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்குமா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த இபிஎஸ், “ஒன்றை நல்லா புரிஞ்சுக்கணும். அரசியல் சூழலை பொறுத்துதான் கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் நெருங்கும் போதுதான் அது முடிவு செய்யப்படும்” என்றார். இது பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதை மறைமுகமாக சொல்வதாக உள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது […]
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு மேடையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது நாமக்கல் மாவட்டம் தான் எனவும் நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலை அமைவது மிகவும் பொருத்தமானது எனவும் உறையற்றினார். தமிழ்நாட்டில் திமுகவின் மதிப்பு சரிந்து விட்டதாக முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்தும் முதலவர் ஸ்டாலின் […]
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்துக்கு வருகை தந்திருந்தார். அதன்பிறகு காரின் மூலம் நாமக்கல் சென்ற அவர் மதியம் 12.30 மணியளவில் பரமத்தி சாலையில் உள்ள செலம்பக்கவுண்டா் பூங்காவில் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் உருவச் சிலையைத் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, 5 மணி அளவில் நாமக்கல்லில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு […]
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அரசியல் காட்சிகளின் தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டம் வேண்டாம் எனவும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற […]
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெறும் எனவும் , இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இப்போது வரை இது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இதனை பார்த்த தமிழ் ஆர்வலர்கள் கடும் கோபத்துடன் இந்தி பேசாத மாநிலங்களில் என்ன காரணத்துக்காக இந்தி […]