#BREAKING: தமிழக காவலர்களுக்கு உள்துறை அமைச்சக விருது!

Default Image

சிறப்பாக செயல்பட்ட தமிழக போலீசார் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிப்பு.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் 5 அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  கூடுதல் எஸ்.பி.கனகேஸ்வரி, காவல் ஆய்வாளர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி ஆகியோருக்கும், தமிழகத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் செல்வராஜன் மற்றும் புதுச்சேரி எஸ்ஐ செல்வராகனுக்கு விருதுகள் மத்திய உள்துறை அமைச்சக விருது  அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான நாடு முழுவதும் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கிய 151 போலீசாருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 15 பேர் சி.பி.ஐ, 11 பேர் மகாராஷ்டிரா காவல்துறை, தலா 10 பேர் எம்பி காவல்துறை மற்றும் உ.பி காவல்துறை, தலா 8 பேர் கேரள காவல்துறை, ராஜஸ்தான் காவல்துறை, மேற்கு வங்க காவல்துறையை சேர்ந்தவர்கள்.  மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இதில் 28 பெண் போலீசார் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்