#BREAKING: காலை சிற்றுண்டி – மதுரையில் செப்.15ல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

Default Image

காலை சிற்றுண்டி திட்டத்தை மதுரை பள்ளியில் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 

காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மதுரையில் உள்ள பள்ளியில் தொடங்கி வைக்கிறார். அதன்படி, தமிழகம் முழுவதும் 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.

சென்னை உள்பட 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவர்களுக்கும், 23 நகராட்சிகளில் உள்ள 163 பள்ளிகளில் 17,427 மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. மதுரை மாநகராட்சியில் உள்ள 26 தொடக்க பள்ளிகளில் 4,388 மாணவர்கள் பயனடையும் வகையில் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்காக ரூ.33.56 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்