ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்ப போகிறோம்.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி.!

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி ஆர்.எஸ்.பாரதி (திமுக) விமர்சித்ததால் அவர் மீது அண்ணாமலை (பாஜக) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கள்ளக்குறிச்சில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என விமர்சனம் செய்து இருந்தார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனை தொடர்ந்து இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மானநஷ்டஈடு வழக்கு பதிந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜூன் 23ஆம் தேதி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து என்மீது அவதூறு விளைவிக்கும் வகையில் பேசினார். நான் அரசியலுக்கு வந்த 3 ஆண்டுகளில் யார் மீதும் அவதூறு வழக்கு தொடரவில்லை. ஆனால் தற்போது இவர்கள் பேசிவருவதை பார்க்கையில், வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.
ஆர்.எஸ்.பாரதி மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதிக்கு நீதிமன்ற சம்மன் அனுப்பப்படும். ஆளும் கட்சியாக உள்ள திமுகவை யாரும் எதிர்ப்பது கிடையாது. ஆனால், நங்கள் திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதியை இந்த வழக்கில் சிறைக்கு அனுப்ப போகிறோம்.
அவரிடம் இருந்து நஷ்டஈடு பெற்று மதுவினால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அமைக்கப்படும் என எங்கள் வழக்கில் குறிப்பிட்டுள்ளோம். 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.எஸ்.பாரதி என்னை ” சின்னப்பையன்” என்று விமர்சித்தார். இந்த சின்ன பையன் இந்த வழக்கை வைத்து திமுகவையும், ஆர்.எஸ்.பாரதியையும் என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.
படிப்பு நாங்க போட்ட பிச்சை என்பது, பி.ஏ படித்தவர்களை நாய் என்று கூறுவது. ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சுக்கு தான் நாங்கள் வழக்கு போட்டுள்ளோம். இந்த வழக்கை எங்கள் வழக்கறிஞர் பால் கனகராஜ் பதிவு செய்துள்ளார் என்று செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025
வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025