மின்சாரம் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்க நடவடிக்கை – தலைமை செயலாளர்.!

South TN Rains - TN Govt

கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் உணவும், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். மேலும், மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சரம் இல்லாமல் இருளில் வசித்து வரும் நிலையில், தூத்துக்குடி, நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சிவ்தாஸ் மீனா இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் மின்சாரம் விநியோகம் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு, நிவாரப்பணிகளை விரைவுபடுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்டுகிறது.

கனமழை எதிரொலி.! நெல்லை, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்