முன்னாள் நீதிபதி தஹில் ரமானி மீது சிபிஐ விசாரணை! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்!

Default Image

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்திருந்த தஹில் ரமானியை மேகாலயா நீதிமன்ற நீதிபதியாக மாற்றியும், மேகாலயா நீதிமன்ற நீதிபதியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றியும் நீதிபதி நிர்ணயிக்கும் கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்து இருந்தது.

இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாஹில் ரமானி சென்னை தனது உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்து, சென்னையில் குடியேறியுள்ளார்.

இந்நிலையில் இவர் அண்மையில் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய் உத்தரவிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்