“நானும் அதே தண்ணீரை தான் குடிக்கிறேன்” கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பதில்!

ஹரியானாவில் இருந்து வரும் யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்படுவதாக கெஜ்ரிவால் கூறிய குற்றசாட்டை பிரதமர் மோடி கடுமையாக எதிர்த்தார். 

Delhi CM Arvind Kejriwal - PM Modi

டெல்லி : டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என இந்த தேர்தல் மும்முனை போட்டியாக உள்ளது. தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியின் வாக்குறுதிகளை கூறுவதோடு மற்ற கட்சியினர் மீதான தங்கள் விமர்சனங்ளையும் முன்வைக்க தவறவில்லை. டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், டெல்லிக்கு குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கும் யமுனை ஆற்றின் நீர் ஹரியானா மாநிலத்தில் இருந்து வருகிறது என்றும், 

ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. அங்கிருந்து டெல்லிக்கு அவர்கள் தண்ணீர் அனுப்பும் போது விஷம் கலந்து அனுப்புகிறார்கள் என பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். அங்கிருந்து வரும் தண்ணீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் 700 மடங்கு அதிகளவில் அமோனியா உள்ளது எனும் குற்றசாட்டை முன்வைத்தார். இதனை டெல்லி நீர்வளத்துறை பொறியாளர்கள் கண்டறிந்து தடுத்து நிறுத்தி வருகின்றனர் எனவும் கெஜ்ரிவால் பேசினார். 

இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் மோடி இன்று டெல்லியில் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், “யமுனை ஆற்றில் விஷம் கலப்பதாக கெஜ்ரிவால் கூறிய குற்றசாட்டு அருவருப்பானது. தோல்வி பயத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் ஹரியானா மக்கள் மீது வீண் பழி சுமத்துகின்றனர். டெல்லி மக்களும் ஹரியானா மக்களும் வேறு வேறு ஆட்களா? டெல்லி ஹரியானா மக்கள் பலர் ஒருவருக்கொருவர் உறவினர்கள் இல்லையா? டெல்லியில் கூட ஹரியானா மக்கள் பலர் வசிக்கின்றனர். இப்படி இருக்க ஆம் ஆத்மியின் இந்த குற்றசாட்டு அநியாயமானது. 

இது ஹரியானவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே குற்றம் சொல்வது போல உள்ளதாகும். இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் பகிரப்பட்டு வருகிறது. அந்த செயலை ஆம் ஆத்மியினர் அச்சம் கொள்ள வைத்துள்ளனர்.  நானும் அதே யமுனை ஆற்று தண்ணீரை குடித்துள்ளேன் அது எப்படி விஷமாகும்? ஆம் ஆத்மி யமுனை ஆற்றை சுத்தம் செய்வதாக கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்தனர். ஆனால், அதனை இப்போது வரை அவர்கள் நிறைவேற்றம் செய்யவில்லை. ” என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். 

மேலும், கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிராக அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதால், இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியினர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஹரியானா அரசு சார்பில் வழக்கு தொடரப்படும் என்று அம்மாநில அமைச்சர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nayinar Nagendran
CM Break fast Scheme
china donald trump
Nainar Nagendran - R.S. Bharathi
rain news today
Nellai Iruttukadai Halwa shop