டெல்லி : கடந்த 2013 (48 நாட்கள்), 2015, 2020 முதல் 2025 வரை டெல்லி மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி 2025 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதியே தேர்தல் முடிவுகள் வெளியானாலும் இன்னும் முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பை பாஜக தலைமை வெளியிடவில்லை. அதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பிரதமர் […]
டெல்லி : 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று ரிசல்ட் நேற்று (பிப்ரவரி 8) வெளியானது. 2013, 2015, 2020 என்ற 3 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி இந்த முறை டெல்லியில் ஆட்சியை இழந்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே […]
சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 8) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தது. இதனை அடுத்து பாஜக சார்பில் யார் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்கள் என்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதே போல, தமிழ்நாட்டில் ஈரோடு […]
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கப்பட்ட நிலையில், தொடங்கியதில் இருந்தே ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டது. எனவே, பாஜக வெற்றி வாகை சூடிவிட்டது என முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தொண்டர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். இறுதியாக, 70 தொகுதிகளில் 44 தொகுதியில் பாஜக வெற்றிபெற்று டெல்லியை கைப்பற்றியுள்ளது. […]
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும் ஆத்மி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் முன்னிலை நிலவர முடிவுகள் வெளியாகி வருகின்றன. கிட்டத்தட்ட பாஜக வெற்றியை பதிவு செய்துவிட்ட நிலையில், பாஜக ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில், வெற்றியை உறுதி செய்யும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி […]
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால், 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க உள்ளது. இப்படியான சூழலில் அங்கு யார் முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது. தற்போது ஒரு சில செய்தி நிறுவனங்கள் புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி மாநில முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பாஜக வேட்பாளர் பர்வேஷ் […]
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள் மட்டும்), 2015 (5 ஆண்டுகள்), 2020 (5 ஆண்டுகள்) என டெல்லியில் ஆட்சி செய்த ஆம் ஆத்மி இந்த முறை தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 47 தொகுதிகளில் பாஜகவும், 23 தொகுதிகளில் மட்டும் ஆம் ஆத்மியும் முன்னிலை பெற்று வருகின்றன. இதில் பல்வேறு தொகுதியில் இறுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி […]
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும் ஆத்மி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் முன்னிலை நிலவர முடிவுகள் வெளியாகி வருகின்றன. கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடிய ஆம் ஆத்மிக்கு இந்த முறை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ஆட்சியை இழக்கும் […]
டெல்லி : டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என இந்த தேர்தல் மும்முனை போட்டியாக உள்ளது. தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியின் வாக்குறுதிகளை கூறுவதோடு மற்ற கட்சியினர் மீதான தங்கள் விமர்சனங்ளையும் முன்வைக்க தவறவில்லை. டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் […]
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, எதிர்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக வேட்புமனு இறுதி பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி 20ஆம் தேதி இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும். பிப்ரவரி 5இல் வாக்குப்பதிவும், பிப்ரவரி […]
டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு கடந்த 2015 முதல் தொடர்ந்து 2 சட்டப்பேரவை தேர்தல்களிலும் வென்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லி அரசியல் மாற்றங்கள்… கடந்த சில மாதங்களாக டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை வழக்கில் கைது, பிறகு ஜாமீன் , முதலமைச்சர் பதவி ராஜினாமா […]
டெல்லி : இன்று காலை டெல்லி முதல்வர் அதிஷி மர்லினா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அதில் 2025 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசிய தலைநகரில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்குகளிலும் ரூ.2,100 டெபாசிட் செய்யப்படும் என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இது குறித்து பேசிய பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் […]
டெல்லி : தலைநகர் டெல்லியில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2 முறையும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக தொடர்ந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் தனது முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அதன் பிறகு டெல்லி மாநில முதலமைச்சராக அதிஷி தற்போது பொறுப்பில் உள்ளார். நாட்டின் தலைநகர் என்பதால், மாநிலத்தின் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி பதவி என அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்து கொண்டார். கைலாஷ் கெலாட், டெல்லி மாநில போக்குவரத்துத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட துறை அமைச்சராக பொறுப்பில் இருந்து வந்தார். அவர் டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில், டெல்லி எம்எல்ஏவாகவும், மாநில அமைச்சராகவும் மக்கள் […]
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வாரம் வெள்ளியன்று உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளியே வந்தார். இருந்தாலும், அவர் வகித்து வந்த டெல்லி முதமைச்சர் பதவியை தொடர முடியாதபடி உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. இதனை அடுத்து கடந்த வாரம் தனது முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இன்னும் சில மாதங்களில் வரும் டெல்லி […]
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்த டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளியே வந்தார். இருந்தும், டெல்லி மாநில முதல்வர் பதவியை தொடர முடியாத வண்ணம் உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தது. இதனைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், புதிய முதல்வராக ஆம் ஆத்மி மூத்த நிர்வாகியும், டெல்லி அமைச்சருமான அதிஷியை முன்மொழிந்தார் கெஜ்ரிவால். இன்னும் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தான் வகித்து வரும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து யார் அடுத்த டெல்லி மாநில முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்ற கேள்வி, தற்போது டெல்லி மட்டுமல்லாது தேசிய அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கில் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலில் அமலாக்கத்துறையினர் கைது செய்து இருந்தனர். அடுத்ததாக இதே வழக்கில் சிபிஐ விசாரணை குழுவினரும் கைது செய்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில், கெஜ்ரிவாலுக்கு முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தாலும், சிபிஐ வழக்கில் அவர் கைதாகி இருந்ததால் கெஜ்ரிவால், டெல்லி திகார் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கில் ஜாமீன் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 17 மாதங்கள் சிறையில் இருந்த சிசோடியாவுக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே வந்த மணீஷ் சிசோடியா இன்று டெல்லியில் நடைபெற்ற ஓர் அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் தற்போது ஜாமீனில் வெளியே வந்தது விடுமுறையை கொண்டாட அல்ல. […]
ஆம் ஆத்மி கட்சி : ஹரியானா மாநிலத்தில் அக்டோபரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கெஜ்ரிவால் மனைவி வாக்குறுதி அளித்துள்ளார். ஹரியானா சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் […]