பாஜகவில் இருந்துதான் விலகிற்கு, இந்துத்துவாவில் இருந்து விலகவில்லை – உத்தவ் தாக்கரே

Default Image

மகாராஷ்டிரா மாநிலம் முதல் மந்திரியாக பொறுப்பேற்று 100 நாட்கள் ஆனதையொட்டி உத்தவ் தாக்கரே அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக இன்று சென்றார். பின்னர் அயோத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய உத்தவ் தாக்கரே, நான் கடவுள் ராமரின் ஆசிர்வாதம் கிடைக்க இங்கு வந்துள்ளேன் என்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான் அயோத்திக்கு வருவது இது 3வது முறையாகும் என கூறினார். மேலும் பாஜகவில் இருந்து தான் சிவசேனா விலகியுள்ளது, இந்துத்துவாவில் இருந்து விலகவில்லை என்று குறிப்பிட்டார். இதனிடையே அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கு மகாராஷ்டிரா மாநில அரசு ரூ .1 கோடி வழங்குவதாகவும் தாக்கரே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்