மோடி 3.Oவின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்.! அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு.!

All Party Meet

புது டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 21 காலை 11 மணிக்கு புது டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் நடைபெறும், முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவாகும். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23-ல் தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற மழைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி நிறைவடைகிறது.

இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜூலை 21ம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுவதால், அக்கட்சியின் பிரதிநிதிகள் யாரும், அன்றைய தினம் நடைபெறும் அனைத்துக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என திரிணாமுல் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்