அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தது தொடர்பாக பல மாநிலங்களில் ஐடி ரெய்டு

Default Image

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தது தொடர்பாக டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஐடி ரெய்டு.

பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) மற்றும் அவற்றின் சந்தேகத்திற்குரிய நிதியுதவிக்கு எதிரான வரி ஏய்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக, வருமான வரித் துறை இன்று(செப் 7) பல மாநிலங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் சில மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் ராஜேந்திர யாதவ் வீட்டில் ஐடி துறையினர் சோதனை நடத்தினர். அவரது சட்டமன்ற தொகுதியான கோட்புட்லி மற்றும் உத்தரகாண்டில் உள்ள வணிக வளாகங்கள் உட்பட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்