டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தொகுதி மறுவரையறை குறித்து வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து கொண்டு சென்றனர். மக்களவையில் இதுகுறித்து விவாதம் நடத்த தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், தொடர் அமளி […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து கடந்த திங்கள் முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். நேற்று எதிர்க்கட்சி தலைவர் நெல்லை ஓய்வு எஸ்ஐ கொலைக்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்திருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை போல டெல்லியில் நாடாளுமன்றத்தில் மத்திய […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான துறை அமைச்சர்களின் பதில், மற்ற விவாதங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதில் இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, உத்திர பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வு பற்றி பெருமை பொங்க பேசினார். பிரதமர் பேசுகையில், பிரயாக்ராஜின் மகா கும்பமேளா பற்றி பேசுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். மகா கும்பமேளா வெற்றிகரமாக […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி, மக்களவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால், திமுகவின் கோரிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்துவிட்டார். இதனால் திமுக எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், […]
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றியது. 22 எம்எல்ஏக்களை கொண்ட ஆம் ஆத்மி எதிர்க்கட்சியாக உள்ளது. டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தாவும், துணை முதலமைச்சராக பர்வேஷ் வர்மாவும் பதவியேற்றனர். எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதலமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு டெல்லி சட்டப்பேரவை கூடி நடைபெற்று வருகிறது. அப்போது டெல்லி சட்டமன்றத்திற்குள் நுழைந்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் , முதலமைச்சர் […]
டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த தேர்தலின் போது கடந்த ஜனவரி 31 அன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது துவாரகாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரணியில் டெல்லி தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பாஜக ஆட்சி அமைந்தவுடன் மாதம் ரூ.2500 வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்து இருந்தார். ஆம் ஆத்மி கேள்வி இன்னும் அது குறித்து அதிகாரப்பூர்வமாக […]
டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி மொழி குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “மொழி அடிப்படையில் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, இந்தியாவின் பன்முக மொழி பாரம்பரியம் அதற்கு பொருத்தமான பதிலடி கொடுக்கிறது. மராத்தி உட்பட அனைத்து முக்கிய மொழிகளிலும் கல்வியை ஊக்குவித்து வருகிறது. “இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை. ஒவ்வொரு மொழியும் மற்றொரு […]
டெல்லி : இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1993ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்ததது. பாஜக ஆட்சி காலத்தில் சாகிப் சிங் வர்மா, மதன் லால் குரானா, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தனர். அதன்பிறகு, 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்து முடிந்த தேர்தலில் 70 தொகுதிகளில் 44 தொகுதியில் பாஜக வெற்றிபெற்று டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக ரேகா குப்தா தேர்வு பாஜக […]
சென்னை : தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமீபத்தில் வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்றிருந்தார்கள், இப்போது போட்டிகள் முடிந்த நிலையில், அவர்கள் சென்னை திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். ஏனென்றால், கும்பமேளாவுக்கு சென்றவர்கள் முன்பதிவு செய்த ரயில் பெட்டியில் ஏறியதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி வீரர்கள் ரயிலில் ஏற முடியாததால் வாரணாசி ரயில் நிலையத்திலேயே காத்திருக்கிறார்கள். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையும் முன் வைத்துள்ளனர். டெல்லியில் 28-ஆண்டுகளுக்கு […]
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி 27 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதியே ரிசல்ட் வெளியாகி இருந்தாலும், இன்று வரை அம்மாநில முதலமைச்சர் யார் என்பது தெரியாமல் இருந்தது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் முடிந்த பிறகு இதற்கான ஆலோசனை இருக்கும் என கூறப்பட்டிருந்தது. அதேபோல, இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் […]
டெல்லி : கடந்த 2013 (48 நாட்கள்), 2015, 2020 முதல் 2025 வரை டெல்லி மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி 2025 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதியே தேர்தல் முடிவுகள் வெளியானாலும் இன்னும் முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பை பாஜக தலைமை வெளியிடவில்லை. அதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பிரதமர் […]
பீகார் : தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, பீகார் மாநிலம் சிவான் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சிவான் பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. அதே போல், வடகிழக்கு மாநிலமான சிக்கிமிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. சிக்கிமின் லாச்சுங் பள்ளத்தாக்கில் காலை 8.13 மணிக்கு 5 கி.மீ ஆழத்தில் க்டர் அளவில் 2.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட […]
சென்னை : தலைநகரான டெல்லியில் இன்று (பிப்ரவரி 17)-ஆம் தேதி அதிகாலை 5:36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0-ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை நேரமாக இருந்ததால், பெரும்பாலான மக்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். பின் திடீரென நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்த சிலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு தேவையான கல்வி நிதியை விடுவிக்காதது, மும்மொழிக்கொள்கை திணிப்பு ஆகியவற்றை கண்டித்து இந்தியா […]
டெல்லி : நியூடெல்லியில் 4.0 ரிக்டர் அளவுகோலில் இன்று அதிகாலை 5:36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிகாலை நேரமாக இருந்ததால், பெரும்பாலான மக்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். பின் திடீரென நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்த சிலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். சில பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் , குறைந்த அளவில் அதிர்வுகளை உணர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலநடுக்கம் டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, குர்கான் மற்றும் பல புறநகரப் பகுதிகளில் உணரப்பட்டது […]
டெல்லி : டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 10 நாட்கள் கடந்த நிலையில், பாஜக தலைமையகம் முதலமைச்சர் பதவிக்கான முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதற்கான காரணமே பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் தான். இப்போது, பிரதமர் மோடி சுற்று பயணங்களை முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள நிலையில், பாஜக மேலிடம் விரைவில் முதலமைச்சர் […]
டெல்லி : இன்று அதிகாலை 5:36 மணி அளவில் நியூடெல்லியில் 4.0 ரிக்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் (National Center for Seismology – NCS) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, குர்கான் மற்றும் பல புறநகரப் பகுதிகளில் உணரப்பட்டது. அதிகாலை நேரமாக இருந்ததால், பெரும்பாலான மக்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். பின் திடீரென நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்த சிலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். […]
டெல்லி : நேற்று (பிப்ரவரி 15) இரவு புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள்அடங்குவார்கள். இந்த நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு சென்றவர்கள் என முதற்கட்டமாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் ஏற முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது. இந்த நிகழ்வை […]
சென்னை : தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதப்படுத்துகிறார். ஆளுநர் திருத்தம் சொல்லி இரண்டாவது முறையாக அனுப்பப்படும் மசோதாவுக்கு கண்டிப்பாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அதனையும் வருடக்கணக்கில் கிடப்பில் போடுகிறார். இதனால் மசோதா காலாவதி பல்வேறு குற்றசாட்டுகளை ஆளுநர் ரவி மீது தமிழக அரசு தரப்பு முன்வைத்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி […]
டெல்லி : 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று ரிசல்ட் நேற்று (பிப்ரவரி 8) வெளியானது. 2013, 2015, 2020 என்ற 3 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி இந்த முறை டெல்லியில் ஆட்சியை இழந்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே […]
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கப்பட்ட நிலையில், தொடங்கியதில் இருந்தே ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டது. எனவே, பாஜக வெற்றி வாகை சூடிவிட்டது என முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தொண்டர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். இறுதியாக, 70 தொகுதிகளில் 44 தொகுதியில் பாஜக வெற்றிபெற்று டெல்லியை கைப்பற்றியுள்ளது. […]