வருமான வரித்துறை எச்சரிக்கை.! பான் -ஆதார் இணைக்க அவகாசம் முடிகிறது .!

Default Image
  • பான் -ஆதார் இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கடைசி தேதி என  அறிவிக்கப்பட்டது. பின்னர் மேலும் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
  • நேற்று ,ஆதாருடன் தங்களது பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், அதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் என வருமான வரித்துறை  கூறியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 12 இலக்க  எண் கொண்ட ஆதார் அட்டை கொடுக்கப் பட்டு உள்ளது. இந்த ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது.

இந்த ஆதார் அட்டை வங்கிக்கணக்கு தொடங்குவது முதல்  எல்லா அரசு திட்டங்களுக்கும் , மானியங்களை பெறுவதற்கும் ஆதார ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுகிறது.
இந்த ஆதார் எண்ணை வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான பான் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை கூறுகிறது.

மேலும் உச்சநீதிமன்றம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், பான் எண் விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதனால் போலியான பான்எண்கள் ஒழிக்கப்பட்டன.

இந்த இணைப்புக்காக பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது . இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம்  தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க கடைசி தேதி என  அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் கெடு தேதி முடிய இன்னும் 2 வாரங்களே உள்ளனர்.இதை தொடர்ந்து வருமான வரித்துறை ஒரு தகவலை வெளியிட்டது.அதில் , ஆதாருடன் தங்களது பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், அதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் என  கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்