புதிய மதுபான கொள்கை.! டெல்லி மற்றும் பஞ்சாபில் பல்வேறு இடஙக்ளில் அமலாக்கத்துறையினர் ரெய்டு.!

Default Image

புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில் டெல்லி மற்றும் பஞ்சாபில் 35 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக, சிபிஐ தரப்பில் ஏற்கனவே அவருக்கு நெருக்கமான இடங்களில் சோதனை நடைபெற்று, மணீஷ் சிசோடியா உட்பட 16 பேர் மீது வழக்குப்பதிவும் அப்போது செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி புரியும், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 35 இடங்களில் புதிய மதுபான கொள்கை ஊழல் புகார் தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்