ஜெகநாதர் கோயிலில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா..!

Default Image

ஒடிசாவின் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலில் 400 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கோவிலை திறக்கப்போவதில்லை என்று அம்மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஒடிசா உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல மனுவில் பிறப்பித்த நோட்டீஸுக்கு மாநில அரசு இவ்வாறு பதிலளித்தது. அதில், ஜெகந்நாத் கோயிலின் கருவறைக்கு போதுமான இடம் இல்லை என்று கூறியுள்ளது. அத்தகைய சூழலில் கோயில்திறக்கப்பட்டால் பக்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்